பிஜேபியில் இணைய தூது விட்ட எஸ்.பி.வேலுமணி… ஆடி அதிர்ந்த எடப்பாடி..!
டெல்லிக்கு அனுப்பி வைத்து தனது பிரச்னைகளை எஸ்.பி.வேலுமணி மூலமே விடிவு தேடுவார் எடப்பாடி அந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருந்த எடப்பாடிக்கு எஸ்.பி.வேலுமணி மீது சிறிய சந்தேகம்.
மு.க.ஸ்டாலினின் மனசாட்சி அவரது மருமகன் சபரீசன் என்றால் எடப்பாடி பழனிசாமிக்கு எஸ்.பி.வேலுமணி. கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர் என்பதால் எஸ்.பி.வேலுமணியை தனது தோளில் தூக்கி வைத்து ஆடினார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், இப்போது எஸ்.பி.வேலுமணி செய்த காரியத்தால் ஆடிப்போய்க் கிடக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
டெல்லிக்கு அனுப்பி வைத்து தனது பிரச்னைகளை எஸ்.பி.வேலுமணி மூலமே விடிவு தேடுவார் எடப்பாடி அந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருந்த எடப்பாடிக்கு எஸ்.பி.வேலுமணி மீது சிறிய சந்தேகம். ஆகையால் அவரை நோட்ட மிட ஆரம்பித்தார்.
சில தினங்களுக்கு முன் எஸ்.பி.வேலுமணியும், தங்கமணியும் டெல்லி சென்று உள் துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசினர். அப்போது அங்கு என்ன நடக்கிறது என்பதை தனது சோர்ஸ் மூலம் அறிந்து கொண்ட எடப்பாடி எஸ்.பி.வேலுமணியை நினைத்து ஆடிப்போய் விட்டாராம்.
அமித் ஷா வேலுமணி சந்தித்தபோது, ‘நீங்க இருக்கச் சொன்னா அதிமுகவுலயே இருக்கேன். இல்ல, கிளம்பி பாஜகவுக்கு என்னோட ஆதரவாளர்களோட வந்துடுறேன்’ எனச் சொல்லி இருக்கிறார். இதை கேள்விப்பட்ட எடப்பாடி ’யாரையுமே நம்பக் கூடாது. நாம யாரை நம்புறோமோ அவங்க தான் குழிபறிப்பாங்கனு தெரிஞ்சுகிட்டேன். நம்மகிட்ட மட்டும் தான் விசுவாசம் காட்டுவாங்கனு யாரையுமே எதிர்பார்க்கக்கூடாது’’ என புலம்பி இருக்கிறார்.
இதனால் எடப்பாடி பழனிசாமிக்கும், எஸ்.பி.வேலுமணிக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.