பிச்சை போட்டா உனக்கு வேணுமா?: தர்ஷனை வம்புக்கு இழுத்த வனிதா 

 

பிச்சை போட்டா உனக்கு வேணுமா?: தர்ஷனை வம்புக்கு இழுத்த வனிதா 

பிக் பாஸ் சீசன் 3யின் 50வது நாளுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் சீசன் 3யின் 50வது நாளுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் மூன்றாவது சீசன் 50 -வது நாளை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இதிலிருந்து பாத்திமா பாபு, வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன் மற்றும் சாக்ஷி ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மீதமிருக்கும் 9 போட்டியாளர்களுடன் 11-வது நபராக நடிகை கஸ்தூரி இணைந்திருக்கிறார் .இந்த நிலையில் இன்றைக்கான முதல் புரோமோ வனிதா மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவது போன்று புரோமோ வெளியானது. அதனால் இன்று கண்டிப்பாக வீட்டில் எதாவது ஒரு சம்பவம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

அதே போல் வந்த உடனே வனிதா தனது வேலலையை ஆரம்பித்து விட்டார். அதில் ஹவுஸ் மேட்ஸ்யிடம் உங்கள் எல்லாரிடம் டைட்டில்லை கொடுத்து அதை நீங்கள் தர்ஷனிடம் கொடுத்தது போல் உள்ளது. பிச்சை போட்டா உனக்கு வேணுமா? தர்ஷன் என்று கேட்க அவரின் முகம் மிகவும் சோர்ந்து விடுவது போல் உள்ளது. 

அக்கா, அண்ணா என்று மரியாதை கொடுப்பதால் நிகழ்ச்சியின் டைட்டில்லை கொடுப்பதற்கு இது என்ன கிழக்கு சீமையிலே படமா என்ன? விட்டு கொடுத்துட்டு போகிறது என்றால் தயவு செய்து கிளம்புங்கள்’ என்றும் கூறியுள்ளார்.