பிச்சை எடுத்த தயாநிதி மாறன் தாத்தா! – கருணாநிதியை விமர்சித்து பதிவிட்ட எச்.ராஜா

 

பிச்சை எடுத்த தயாநிதி மாறன் தாத்தா! – கருணாநிதியை விமர்சித்து பதிவிட்ட எச்.ராஜா

மக்களே பிச்சை எடுக்கும் நிலையில் உள்ளனர், இந்த நிலையில் அவர்களிடம் பிச்சை எடுக்கிறார் மோடி” என்ற வகையில் கருத்தை கூறியிருந்தார். மக்களை பிச்சைக்காரர்கள் என்று தயாநிதி மாறன் கூறிவிட்டார் என்று பா.ஜ.க, அ.தி.மு.க-வினர் கம்பு சுற்றி வருகின்றனர்.

பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பிச்சை எடுப்பதாக கூறிய தயாநிதி மாறன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார். கருணாநிதி படம் ஒன்றை பகிர்ந்து பிச்சை எடுத்த தயாநிதி மாறன் தாத்தா என்று விமர்சித்துள்ளது தி.மு.க தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், “மக்களே பிச்சை எடுக்கும் நிலையில் உள்ளனர், இந்த நிலையில் அவர்களிடம் பிச்சை எடுக்கிறார் மோடி” என்ற வகையில் கருத்தை கூறியிருந்தார். மக்களை பிச்சைக்காரர்கள் என்று தயாநிதி மாறன் கூறிவிட்டார் என்று பா.ஜ.க, அ.தி.மு.க-வினர் கம்பு சுற்றி வருகின்றனர். மக்களை தரக்குறைவாக பேசிய தயாநிதி மாறன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.

dhayanidhi-maran-66

இந்த நிலையில் பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தயாநிதி மாறனை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
நேற்று, “மத்திய அரசு 80 கோடி மக்களுக்கு 1.70 லட்சம் கோடி நேரடியாகவும் 15,000 கோடி சிகிச்சைக்காகவும் 12,000 கோடி மாநிலங்களுக்கும் தந்துள்ள சூழ்நிலையில் பாரத நாட்டு மக்களை பிச்சைக்காரர்கள் என்றும் மக்களை காத்த பிரதமரை பிச்சை வாங்குவதாக கூறியதற்கு தயாநிதி மாறன் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்” என்று கூறியிருந்தார்.
ஆனாலும் எச்.ராஜாவுக்கு ஆத்திரம் அடங்கவில்லை. தயாநிதிமாறனை விமர்சித்து தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அனைத்துக்கும் மேலாக கருணாநிதி படம் ஒன்றை பகிர்ந்து, “தயாநிதி மாறன் தாத்தா பிச்சை எடுத்த போது” என்று விமர்சித்து பகிர்ந்துள்ளார். இது தி.மு.க தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.