பிச்சைக்காரியையும் விடாத வாலிபர்கள் -தூங்கிய சிறுமியை தூக்கியவருக்கு தூக்கு.. 

 

பிச்சைக்காரியையும் விடாத வாலிபர்கள் -தூங்கிய சிறுமியை தூக்கியவருக்கு தூக்கு.. 

மத்தியப் பிரதேசம் இந்தூரில் விஜயவர்கியா என்ற 28 வயது வாலிபர் , டிசம்பர் 1, 2019 அன்று மோஹோ பகுதியில்  நான்கு வயது சிறுமியை கடத்திச் சென்றார், அந்த சிறுமி தெருவோரம் பிச்சையெடுத்து வாழ்க்கை நடத்தி வந்தார்.அவர் இரவில் வீடில்லாததால் பெற்றோருடன் ஒரு மரத்தின் அடியில் தூங்கிக் கொண்டிருந்தபோது, இந்த சம்பவம் நடந்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் இந்தூரில் தெரு தெருவாக பிச்சையெடுக்கும் ஒரு சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வாலிபருக்கு கோர்ட் தூக்கு தண்டனை விதித்தது.. 
மத்தியப் பிரதேசம் இந்தூரில் விஜயவர்கியா என்ற 28 வயது வாலிபர் , டிசம்பர் 1, 2019 அன்று மோஹோ பகுதியில்  நான்கு வயது சிறுமியை கடத்திச் சென்றார், அந்த சிறுமி தெருவோரம் பிச்சையெடுத்து வாழ்க்கை நடத்தி வந்தார்.  அவர் இரவில் வீடில்லாததால் பெற்றோருடன் ஒரு மரத்தின் அடியில் தூங்கிக் கொண்டிருந்தபோது, இந்த சம்பவம் நடந்துள்ளது .

death-penalty.jpg

விஜயவர்கியா  அந்த சிறுமியை இரவு நேரத்தில் தூக்கிச்சென்று  பாலியல் பலாத்காரம் செய்து, பின்னர் கழுத்தை நெரித்துக் கொன்றார், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியபோது  டி.என்.ஏ மாதிரிகள் மற்றும் சி.சி.டி.வி காட்சிகள், அவருக்கு தண்டனையை வாங்கி தருவதில்  முக்கிய பங்கு வகித்தன.
மேலும் 29 க்கும் மேற்பட்ட சாட்சிகளை கோர்ட் விசாரித்து ,சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த 
இளைஞருக்கு மத்தியப் பிரதேசத்தின் இந்தூர்  நீதிமன்றம் திங்கள்கிழமை மரண தண்டனை விதித்தது.