பிசிசிஐ தலைவர் பதவியால் பல கோடியை இழக்கும் கங்குலி!

 

பிசிசிஐ தலைவர் பதவியால் பல கோடியை இழக்கும் கங்குலி!

பிசிசிஐயின் புதிய தலைவராக பொறுப்பேற்கவுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்வதன் மூலம் பலக்கோடி வருமானத்தை இழக்கவுள்ளார். இந்த பதவியில் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை கங்குலி நீடிக்கவுள்ளார். 

பிசிசிஐயின் புதிய தலைவராக பொறுப்பேற்கவுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்வதன் மூலம் பலக்கோடி வருமானத்தை இழக்கவுள்ளார். இந்த பதவியில் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை கங்குலி நீடிக்கவுள்ளார். 

Ganguly

கிரிக்கெட் தாதா என ரசிகர்களால் அழைக்கப்படும் கங்குலி தற்போது டெல்லி கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவுள்ளார். மேலும் இவர் கிரிக்கெட் வர்ணனையாளர், ஐ.பி.எல் தொடரில் டெல்லி கிரிக்கெட் அணியின் ஆலோசகர், கிரிக்கெட் நிபுணர் என பல்வேறு பரிமாணங்களுக்கு சொந்தக்காரராகவும் ஜொலிக்கிறார். தற்போது பிசிசிஐ தலைவராக அவர் பொறுப்பேற்றிருப்பதால் இந்த அனைத்து பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற நிபந்தனைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதனால் அவர் சுமார் 7 கோடி ரூபாய் வருமானத்தை இழக்க நேரிடும். மேலும் இதைவிட பெரிய கொடுமை என்னவென்றால் பிசிசிஐ தலைவராக தேர்வானவர், ஒரு அணியின் பயிற்சியாளராக வரமுடியாது. அதன்படி இனி இந்திய அணியின் பயிற்சியாளராவும் அவரை தேர்வு செய்ய முடியாது. எனவே பிசிசிஐ- யில் கங்குலி தலைவரானது பல ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், அவர் மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளராக வரமுடியாது என்பதால் பல கிரிக்கெட் வீரர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.