பிக் பாஸ் 3 வீட்டிற்குள் நுழைகிறாரா கஸ்தூரி?
பிக் பாஸ் 3யில் நடிகை கஸ்தூரி நுழையுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: பிக் பாஸ் 3யில் நடிகை கஸ்தூரி நுழையுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 3 தொடங்கி வெற்றிகரமாக 40வது நாளை எட்டியுள்ளது. இரண்டு சீசன் போலவே கமல்ஹாசனே இந்த சீசன்யும் தொகுத்து வழங்குகிறார். 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இதிலிருந்து பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா மற்றும் மீரா ஆகியோர் வெளியேறியுள்ளனர்.
அங்கு சண்டை போட்டு கன்டென்ட் தரும் நபர்களே வெளியேறியுள்ளதால் பிக் பாஸ் வைல்ட் கார்டு எண்ட்ரி எடுக்கும் நபர்களை மிகவும் கவனமாக தேர்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த லிஸ்டில் அடிக்கடி சிக்குபவர் நடிகை கஸ்தூரி.
போன வாரம் கமல் சொன்னாரே, கீரிக்கும் பாம்புக்கும் சண்டையின்னு…. அதே மாதிரி கஸ்தூரி பிக் பாஸ் போறாங்கன்னு சொல்லிக்கிட்டேதான் இருக்காங்க. எவ்வளவுதான் மறுக்கமுடியும் ? இதுக்கு விதம் விதமா ‘ஆதாரம்’ வேற . ஊர்ஜிதப்படுத்தப்பட்ட செய்திகளை மட்டும் வெளியிட்டால் யாவரும் நலம்.
— Kasturi Shankar (@KasthuriShankar) August 1, 2019
தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘போன வாரம் கமல் சொன்னாரே, கீரிக்கும் பாம்புக்கும் சண்டையின்னு…. அதே மாதிரி கஸ்தூரி பிக் பாஸ் போறாங்கன்னு சொல்லிக்கொண்டேதான் இருக்காங்க. எவ்வளவுதான் மறுக்கமுடியும் ? இதுக்கு விதம் விதமா ‘ஆதாரம்’ வேற . ஊர்ஜிதப்படுத்தப்பட்ட செய்திகளை மட்டும் வெளியிட்டால் யாவரும் நலம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.