பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்கு நோ சொன்ன பிரபல நடிகை! காரணம் இது தான்!

 

பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்கு நோ சொன்ன பிரபல நடிகை! காரணம் இது தான்!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பை மறுத்து விட்டாராம் நடிகை ஆனந்தி.

சென்னை: பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பை மறுத்து விட்டாராம் நடிகை ஆனந்தி.

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றது. இரண்டு சீசன்கள் நிறைவடைந்த நிலையில் மூன்றாவது சீசன்காக மக்கள் ஆர்வத்துடன் காத்து இருந்தனர். 

அந்த வகையில் சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ வெளியானது. கடந்த இரண்டு சீசன்களில் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார் என்பது இந்த ப்ரோமோ மூலம் உறுதியானது. அதைத் தொடர்ந்து, இந்த சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் உலா வரும் நிலை தொடங்கியுள்ளது.

anandi

 பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குகேற்கும் வாய்ப்பு ‘ஜோடி’ ஷோ மூலம் பிரபலமடைந்த 
 ஆனந்திக்குக் கிடைத்தாக செய்தி பரவி வந்தது. இந்த நிலையில் அவர் இது குறித்து பிரபல ஊடகத்திற்கு பேட்டியளிக்கையில், ‘எனக்கு ஒரு மகன் இருக்கிறான்…அவனுக்கு ஒன்றரை வயது தான் ஆகிறது.  படப்பிடிப்புக்குக் கூட அனுமதி பெற்று அவரை அழைத்துச் செல்கிறேன். இப்படிப்பட்ட சூழ்நிலையில் எப்படி மகனை விட்டு விட்டு பிக் பாஸ் வீட்டில் 100 நாட்கள் இருக்க முடியும். அதனால் தான் வந்த வாய்ப்பை மறுத்தேன்’ என்று கூறியுள்ளார்.