பிக் பாஸ் 3யில் முதல் ஆளாக வெளியேறப்போவது இவர் தான்: அடிச்சி சொல்லும் முன்னாள் போட்டியாளர் காஜல்!

 

பிக் பாஸ் 3யில் முதல் ஆளாக வெளியேறப்போவது இவர் தான்: அடிச்சி சொல்லும் முன்னாள் போட்டியாளர் காஜல்!

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்தது முதல் அந்த நிகழ்ச்சி குறித்தும் போட்டியாளர்கள் குறித்தும் புட்டு புட்டு வைத்து வருகிறார் காஜல் .

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்தது முதல் அந்த நிகழ்ச்சி குறித்தும் போட்டியாளர்கள் குறித்தும் புட்டு புட்டு வைத்து வருகிறார் காஜல் . பிக் பாஸ் முதல் சீசன்னில் பாதியில் சென்று பங்குக்கேற்ற இவர் ரசிகர்களிடம் எந்த ஒரு கேட்ட பெயரும் வாங்காமல் போட்டியிலிருந்து வெளியே வந்தார். 

இவரின் முழு நாள் வேலையே தற்போது ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பது தான். ஏனென்றால் அந்த அளவிற்கு இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நிகழ்ச்சி குறித்து பதிவு செய்து வருகிறார். இந்த நிலையில் இந்த வாரத்திற்கான முதல் நாமினேஷன் துவங்கியுள்ளது. அதில் பாத்திமா, சேரன், கவின், சாக்க்ஷி., மீரா, சரவணன், மதுமிதா கவின், ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த வார பிக் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறப் போகும் நபர் யார் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகின்றனர். 

fathima

தற்போது இதில் யாரு வெளியேறுவார்கள் என்பது குறித்து காஜல் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, ‘இதில் முதல் ஆளாக பாத்திமா பாபுவை தானே அனுப்பிவிடுவார்கள். ஏனென்றால் அவர் கண்டெண்ட் எதுவும் கொடுப்பதில்லை,  தற்போது மீரா தான் கன்டன்ட் கொடுக்கிறார். எனவே, பாத்திமாவை தான் அனுப்புவார்கள்’ என்று கூறியுள்ளார்.