பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்பு சாண்டி வீட்டுக்கு விசிட் அடித்த சரவணன்

 

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்பு சாண்டி வீட்டுக்கு விசிட் அடித்த சரவணன்

 பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய சரவணன், தனது குடும்பத்துடன் சாண்டியின் குடும்பத்தாரைச் சந்தித்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்பு சாண்டி வீட்டுக்கு விசிட் அடித்த சரவணன்

சென்னை:  பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய சரவணன், தனது குடும்பத்துடன் சாண்டியின் குடும்பத்தாரைச் சந்தித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 3யில் சமீபத்தில் சரவணன் பாதி நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதை கேட்ட சக ஹவுஸ் மேட்ஸ் துக்கம் தாங்க முடியாமல் ஓவென்று கதறி அழுதனர். பின்னர் காரணம் கூறுகையில் அவர் கடந்த முறை மீரா- சேரன் மீது வைத்த குற்றச்சாட்டுச் சமயத்தில் தானும் கல்லூரி படிக்கும் காலத்தில் அது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார்.

அதனால் அவர் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததால் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்குமாறு பிக் பாஸ் அறிவித்தார். ஆனால் அதைமீறியும் அவர் வெளியேற்றப்பட்டது பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வெளியே வந்த உடன் மற்ற போட்டியாளர்கள் போல் பேட்டி கொடுக்காமல் தான் உண்டு, தன் குடும்பம் என்று சென்று விட்டார். 

இந்த நிலையில் சொந்த ஊரில் தங்கி இருந்த சரவணன் தமிழக அரசு வழங்கிய கலைமாமணி விருதை வாங்குவதற்காகச் சென்னை வந்திருந்தார். அப்போது தனது மகன் மற்றும் இரண்டாவது மனைவியுடன் சாண்டி வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தாரைச் சந்தித்துள்ளார். அப்போது சாண்டியின் குழந்தை லாலாவுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதை தற்போது அவரது ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.