பிக் பாஸ் வீட்டில் முதல் ஆளாக ஜெயிலுக்கு போவது யாராக இருக்கும்?  

 

பிக் பாஸ் வீட்டில் முதல் ஆளாக ஜெயிலுக்கு போவது யாராக இருக்கும்?  

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து எப்பவும் சண்டை, சச்சரவாகவே சென்று கொண்டு இருந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து எப்பவும் சண்டை, சச்சரவாகவே சென்று கொண்டு இருந்தது. ஆனால் கடந்த 4 நாட்களாக மட்டும் நிகழ்ச்சி கலகலப்பாக்கச் சென்று கொண்டு இருக்கிறது. இதற்குக் காரணம்  இந்த வாரத்திற்கான டாஸ்காக அறிவிக்கப்பட்ட கொடூரக் கொலை தான். வனிதா மற்றும் முகன் கூட்டுச்சேர்ந்து கொலை செய்த டாஸ்க் நேற்று முடிவுயடைந்தது.  

அதைத்தொடர்ந்து சிறப்பாக டாஸ்க் செய்தவர்களாக வானிதா, மோகன் வைத்யா, மற்றும் சாக்‌ஷி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதன் மூலம் இவர்கள் மூவரும் அடுத்தவார தலைவர் பதவிக்குப் போட்டியிட முடியும் என அறிவிக்கப்பட்டது. மேலும் டாஸ்க்கில் கலந்து கொள்ளாதவர்கள் குறித்த கேள்விக்கு, சேரன் மற்றும் சரவணனின் பெயரை இந்த வார தலைவர் அபிராமி அறிவித்தார். உடனே அவர்கள் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஜெயிலுக்குள் இருக்க வேண்டும் என பிக் பாஸ் உத்தரவிட்டார். 

HOUSE METES

இதனால் கடுப்பான சரவணன் தான் டாஸ்க் நன்றாகச் செய்ததாகக் கூறி முதல் முறையாகச் சண்டை போட்டு வருகிறார். மறுபுறம் சேரன் சிறை உடை அணிந்துவிட்டு ஜெயிலுக்கு செல்ல தயாராக வந்துவிட்டார். தொடர்ந்து சரவணன் சமாதானம் ஆகாத காரணத்தினால் வனிதா இடையில் புகுர்ந்து கவின் சரியாக விளையாடாததால் தான் இந்த பிரச்சனை ஏற்பட்டதாகக் கூறி அவரை ஜெயிலுக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டனர். உடனே கவின் அவரின் சொல்லைக் கேட்டு தான் ஜெயிலுக்குள் செல்ல தயார் என்று கூறியுள்ளார். 

ஆக, சரவணன், சேரன், கவின் ஆகிய 3 பேரில் முதலில் சிறைக்கு செல்வது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது. அதற்கான விடை இன்றைய எபிசோடில் தெரிய வரும்.