பிக் பாஸ் வீட்டில் போலீஸ்: தாய்மை உணர்வை வெளிப்படுத்திய வனிதா!

 

பிக் பாஸ் வீட்டில் போலீஸ்: தாய்மை உணர்வை வெளிப்படுத்திய வனிதா!

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான கடைசி புரோமோ வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான கடைசி புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான வனிதா மீது அவரது முன்னாள் கணவர் ஆனந்த்ராஜ், தனது மகளை வனிதா கடத்தி வந்துவிட்டதாக கூறி புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த தெலுங்கானா போலீசார் அவரிடம் விசாரணை செய்ய நேற்று தமிழகம் வந்தனர். தமிழக போலீசாரின் உதவியுடன் பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற போலீஸார் வனிதாவிடம் விசாரணை செய்தாக தகவல் வெளியானது. 

ஆனால் அதை கேட்ட ரசிகர்கள் இது வதந்தியாக இருக்கலாம் அல்லது பிக் பாஸ் தனது trp-காக இப்படி ஒரு புரளியை கிளப்பி விட்டு இருக்கலாம் என்று கூறினார். இந்த நிலையில் இன்றைக்கான கடைசி புரோமோ வெளியாகியுள்ளது. அதில்,  வனிதா தன்னிடம் போலீஸ் விசாரித்தது குறித்து தனது சக போட்டியாளரான ரேஷ்மாவிடம் பகிர்ந்து கொள்கிறார். 

அவர் கூறியதாவது, ‘ஒரு போலீசாக நான் ஏன் வந்தேன் என்றால், கேஸ் முடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது. ஒன்னு குழந்தையை திருப்பி கொடுக்க வேண்டும் இல்லனா குழந்தையை காண்பிக்க வேண்டும்’ என்று போலீஸ் கூறியதை அப்படியே ரேஷ்மாவிடம் ஒப்பிக்கிறார்.