பிக் பாஸ் வீட்டில் நிறைய விஷ பாட்டில்கள் இருக்கு மக்களே..!: ஜனனி

 

பிக் பாஸ் வீட்டில் நிறைய விஷ பாட்டில்கள் இருக்கு மக்களே..!: ஜனனி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகை ஜனனி, தனக்கு கிடைத்த விஷ பாட்டில் எனும் பட்டப்பெயர் குறித்து மனம் திறந்துள்ளார்.

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகை ஜனனி, தனக்கு கிடைத்த விஷ பாட்டில் எனும் பட்டப்பெயர் குறித்து மனம் திறந்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள மனதை ஈர்த்தவர் நடிகை ஜனனி. பிக் பாஸ் வீட்டில் முதல் கேப்டன் என்பது முதல் கோல்டன் டிக்கெட் வென்ற போட்டியாளர் என்ற பெருமையை பெற்றவர்.

janani

பிக் பாஸ் வீட்டில் எந்த கலகத்தையு ஏற்படுத்தவில்லை என்றாலும், இவருக்கு விஷ பாட்டில் என்ற பட்டப்பெயர் ஒட்டிக் கொண்டது. பெரும்பாலான பிக் பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் விஷ பாட்டிலாக அறியப்படும் ஜனனி, தனது பிக் பாஸ் அனுபவம் குறித்து மனம் திறந்துள்ளார்.

திரைப்பட வாய்ப்புகள் இல்லாததால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டதாக கூறும் ஜனனி, முதல் சீசனை பார்த்து விளையாட்டு எப்படி இருக்கும் என்ற தெளிவு இருந்தது. அதனால் ஆரம்பம் முதலே பிக் பாஸ் வீட்டில் நான் நானாகவே இருந்தேன் என்று கூறுகிறார்.

janani

பிக் பாஸ் வீட்டில் பல்வேறு பிரச்னைகள் அதனால் ஏற்பட்ட சர்ச்சைகள் என ஏராளம். ரித்விகாவுடனான நட்பு, மும்தாஜ், பாலாஜியுடன் ஏற்பட்ட பாசம், மகத்-யாஷிகா காதல், யாஷிகா-ஐஸ்வர்யா நட்பு என பல விஷயங்களை கடந்து வந்துள்ளேன். மக்களிடத்தில் எந்த ஒரு வெறுப்பையும் சம்பாதிக்காதது மனதிற்கு நிறைவாக இருப்பதாக ஜனனி தெரிவித்தார்.

மேலும், தமிழ் பெண்ணு தான் பிக் பாஸ் டைட்டிலை வெல்ல வேண்டும் என்று சொன்னதில் தவறு இருப்பதாக உணரவில்லை. தமிழ் நிகழ்ச்சி ஒன்றில் இறுதிப்போட்டி வரை தமிழ் பெண்கள் தகுதிபெற்று வந்துள்ள போது, டைட்டிலை ஏன் தட்டிச் செல்லக் கூடாது என்றார். ரித்விகா, விஜயலக்ஷ்மி, ஜனனி உள்ளிட்டோர் எண்ணியதுபோல் தமிழ் பொண்ணான ரித்விகா தான் டைட்டிலை தட்டிச் சென்றார்.

janani

காமெடியாக எனக்கு இந்த விஷ பாட்டில் என்ற பெயர் ஒட்டிக் கொண்டது. உண்மையில் பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை என்னால் யாரும் மன உளைச்சலுக்கு ஆளாகவில்லை. யாருக்கும் இடையே நான் சண்டை மூட்டவில்லை. சொல்லப்போனால் பிக் பாஸ் வீட்டில் நிறைய விஷ பாட்டில்கள் இருப்பதாக ஜனனி தெரிவித்துள்ளார்.