பிக் பாஸ் வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பேசுகிறார் கமல்: நடிகை மதுமிதா பரபரப்பு குற்றச்சாட்டு!

 

பிக் பாஸ் வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பேசுகிறார் கமல்: நடிகை மதுமிதா பரபரப்பு குற்றச்சாட்டு!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் காவிரி நீர் குறித்து நான் பேசியதை மற்ற போட்டியாளர்கள் அரசியல் ஆக்கிவிட்டார்கள் என்று நடிகை மதுமிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் காவிரி நீர் குறித்து நான் பேசியதை மற்ற போட்டியாளர்கள் அரசியல் ஆக்கிவிட்டார்கள் என்று நடிகை மதுமிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

bb

கடந்த ஜூன் மாதம் விஜய் டிவியில் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கியது
பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில்  தனக்குத் தானே தீங்கு விளைவித்துக் கொண்டதாகப் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்  நடிகை மதுமிதா. இதையடுத்து விஜய் டிவி நிர்வாகம் நடிகை மதுமிதா சம்பள பாக்கியை கேட்டு தற்கொலை மிரட்டல் விடுப்பதாகப் போலீசில் புகாரளித்தது. ஆனால் தன் மீது விஜய் டிவி பொய்ப் புகார் அளித்துள்ளதாக மதுமிதா தெரிவித்தார்.இப்படி இந்த விவகாரம் சில வாரங்களாக அரசல் புரசலாக சென்று கொண்டிருந்தது.

madumitha

இந்நிலையில் நடிகை மதுமிதா சென்னை ஈக்காட்டுதாங்கலில்  செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  பிக்பாஸ் நிகழ்ச்சியில் காவிரி நீர் குறித்து நான் பேசியதை மற்ற போட்டியாளர்கள் அரசியல் ஆக்கிவிட்டார்கள். ஒரு குழுவாக சேர்ந்து கொண்டு எனக்கு தொல்லை கொடுத்தார்கள். அதனால் நான் தற்கொலை முயற்சி எடுத்தபோது என்னை கஸ்தூரியும், சேரனும் தான் காப்பாற்ற முயன்றார்கள். மற்றபடி வேறு யாரும் பதறவில்லை. எனக்காக பரிந்து பேசிய கஸ்தூரியையும் அவர்கள் திட்டி தீர்த்தார்கள். கமல்  சார் பேசும் போது  கூட அவர்கள்  முகத்தில் எந்தவொரு குற்ற உணர்வும் இல்லாமல் இருந்தது வேதனை அளிக்கிறது’ என்றார்.

 

தொடர்ந்து பேசிய அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் மறைக்கப்பட்ட விஷயங்களுக்காக கமல்ஹாசன் குரல் கொடுக்க வேண்டும். வெறும் 40 நிமிட நிகழ்ச்சியைப் பார்த்துப் பேசாமல் 24 மணிநேரமும் என்ன நடக்கிறது என்பதைக் கண்காணித்துத் தெளிவுபடுத்த வேண்டும்’பி என்று கூறினார்.