பிக் பாஸ் வீட்டில் ஆண்கள், பெண்களை அடிமையாக்குகிறார்கள்: மதுமிதா குற்றச்சாட்டு 

 

பிக் பாஸ் வீட்டில் ஆண்கள், பெண்களை அடிமையாக்குகிறார்கள்: மதுமிதா குற்றச்சாட்டு 

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் சீசன் 3 கடந்த சில நாட்களாகவே போர் அடித்து வருவதாக ரசிகர்கள் ஒரு குற்றச்சாட்டு வைத்தனர். அதனால் ஆட்டத்தை மீண்டும் விறுவிறுப்பாக பிக் பாஸ் ஹோட்டல் டாஸ்க் என்ற பெயரில் மீண்டும் வனிதாவை வீட்டிற்குள் அனுப்பி கலவரத்தை உண்டுபடுத்தியுள்ளது. நேற்றைய எபிசோடில்  முகன், அபிராமி இடையே சண்டை மூடிவிட்டு வீட்டையே இரண்டு ஆக்கி விட்டார். 

இந்த நிலையில் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. அதில் மதுமிதா, ‘ஆண்கள், பெண்களை இந்த வீட்டில் பயன் படுத்திக்கொள்கிறீர்கள். உண்மையாக அந்த விஷயம் இன்று நடந்து விட்டது. வனிதா வந்த உடனே என்ன சொன்னாங்க? இங்க ஆண்கள், பெண்களை அடிமை படுத்துறீங்க. உங்க கிட்ட நியாயம் இல்ல. நீங்க நல்ல யூஸ் பண்ணிக்குறிங்க’ என்றார். 

உடனே கவின், ‘யாரும் இங்க அப்படி செய்வதில்லை. நீங்க சொல்வது ரொம்ப பெரிய வார்த்தை பார்த்து பேசுங்கள்’ என்றார். ஆகா மொத்தத்தில் ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’…. என்று ஒன்றாக இருந்த பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வனிதா என்ட்ரி கொடுத்து கலவரத்தை உண்டாக்கியுள்ளார்.