பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வருவேன்: ஓவியா அதிரடி!

 

பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வருவேன்: ஓவியா அதிரடி!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் செல்லாக்குட்டியான ஓவியா மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வரப்போவதாக கூறியுள்ளார்.

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் செல்லாக்குட்டியான ஓவியா மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வரப்போவதாக கூறியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் கடந்த ஜூன்.17ம் தேதி தொடங்கியது. பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று போட்டியை துவங்கி வைத்த ஓவியா தற்போது மீண்டும் வரப்போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

Oviya

பிக் பாஸ் முதல் சீசனில் தனது இயல்பான நடவடிக்கைகளால் பிக் பாஸ் வீட்டிற்குள் எதிர்ப்பையும், மக்களிடத்தில் அன்பையும் பெற்றவர். பிக் பாஸ் வீட்டில் தனிமையின் கொடுமையில் சிக்கிய ஓவியா, பாதியிலேயே போட்டியைவிட்டு விலகினார். பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய அவருக்கு வெளியே ஓவிய ஆர்மியை உருவாக்கி ரசிகர்கள் அவரை கொண்டாடினர்.

இந்நிலையில், பிக் பாஸ் 2 சீசன் இன்னும் சில தினங்களில் முடிவடையவிருப்பதால் பழைய போட்டியாளர்கள் ரீ-எண்ட்ரி கொடுத்து வருகின்றனர். இது குறித்து ஓவியாவிடம் ட்விட்டரில் கேள்வி எழுப்பிய ரசிகர், மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் உங்களை பார்க்க வாய்ப்பிருக்கிறதா என்றார். அதற்கு ஓவியாவுக்கே உரித்தான ஸ்டைலில் ‘வெய்ட் அண்ட் வாட்ச்’ என்று பதிலளித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 2-வை தொடங்கி வைத்த ஓவியாவே இறுதிப்போட்டியையும் முடித்து வைப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.