பிக் பாஸ் வீட்டிற்குள் மகனை நினைத்துக் கலங்கும் வனிதா!

 

பிக் பாஸ் வீட்டிற்குள் மகனை நினைத்துக் கலங்கும் வனிதா!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக வனிதா நுழைந்ததுமே சண்டைகளுக்கு கேரண்டி என டிவிட்டுகள் பறந்தன.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக வனிதா நுழைந்ததுமே சண்டைகளுக்கு கேரண்டி என டிவிட்டுகள் பறந்தன. அந்தளவிற்குக் கணவருடன் விவாகரத்து, தந்தையுடன் சண்டை, குடும்பத்தினருடன் சண்டை என பல சர்ச்சைகளில் சிக்கி மக்களிடம் பிரபலமானார். மேலும் செய்தியாளர் ஒருவரிடம் சண்டை சண்டை போட்டதையும் அவ்வளவு எளிதில் யாரும் மறக்க முடியாது. 

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த முதல் நாள் அமைதி காத்து வந்த வனிதா, கேப்டன் பதவி கொடுத்தபின் தனது சுயரூபத்தைக் காட்டத் தொடங்கிவிட்டார். குறிப்பாக மீரா வந்த பிறகு அவரிடம் சண்டை போடுவதை மட்டுமே முழு நேர வேலையாக வெய்திருக்கிறர். 

இந்த நிலையில் இன்றைக்கான மூன்றாவது புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் வனிதா விஜயகுமார், ‘என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நாள், என்னுடைய மகன் பிறந்த நாள். ஒன்னு அம்மாவை காப்பாற்ற முடியும் அல்லது குழந்தையை காப்பாற்ற முடியும் என்றார்கள். உடனே நான் அவனிடம் நீ மட்டுமாவது என்னுடன் கடைசி வரை இருக்க வேண்டும் என்று கேட்டான். அவன் என் கையை பிடித்துக் கொண்டான். அவன் திரும்பி என்னிடம் வர மாட்டானா என்று காத்திருக்கிறேன்’ என்று அழுதுகொண்டே கூறுகிறார்.