பிக் பாஸ் ரீயுனியன் பார்ட்டிக்கு மட்டம்போட்ட பிக் பாஸ் தோழிகள்!

 

பிக் பாஸ் ரீயுனியன் பார்ட்டிக்கு மட்டம்போட்ட பிக் பாஸ் தோழிகள்!

கமல்ஹாசன் தலைமையில் சமீபத்தில் நடந்த பிக் பாஸ் ரீயுனியன் பார்ட்டியில் பிக் பாஸ் தோழிகளான ஐஸ்வர்யாவும், யாஷிகாவும் தவிர்த்துவிட்டனர்.

சென்னை: கமல்ஹாசன் தலைமையில் சமீபத்தில் நடந்த பிக் பாஸ் ரீயுனியன் பார்ட்டியில் பிக் பாஸ் தோழிகளான ஐஸ்வர்யாவும், யாஷிகாவும் தவிர்த்துவிட்டனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கடந்த வாரம் முடிவடைந்தது. இந்த சீசனின் டைட்டிலை ரித்விகா தட்டிச் சென்றார். இரண்டாவதாக ஐஸ்வர்யாவும், மூன்றாம் இடத்தை விஜயலக்ஷ்மியும் பெற்றனர்.

aishwaryarashika

இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர்களுக்காக உலகநாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த பார்ட்டியில் பெரும்பாலானோர் கலந்துக் கொண்ட நிலையில் மும்தாஜ், யாஷிகா, ஐஸ்வர்யா ஆகியோர் கலந்துக் கொள்ளவில்லை என தெரிகிறது.

biggboss

பிக் பாஸ் டைட்டிலை ஒரு தமிழ் பொண்ணு வென்றதை இவர்களால் ஏற்க முடியவில்லை என கூறப்படுகிறது. மும்தாஜ், ஐஸ்வர்யா, யாஷிகா ஆகிய மூவரும் தங்களது தனிப்பட்ட பணிகளால் பங்கேற்கவில்லையா அல்லது வேண்டும் என்றே இந்த பார்ட்டியை புறக்கணித்தார்களா என்பது தெரியவில்லை.

mumtaz

இந்த பார்ட்டியில் எக்ஸ்ட்ராவாக மகத்தின் காதலி ப்ராச்சி கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.