பிக் பாஸ் மீரா மிதுனுக்கு போலீஸ் சம்மன்! விரைவில் வீட்டை விட்டு வெளியேறுவாரா?
பண மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நடிகை மீரா மீதுனுக்கு போலீஸ் ‘சம்மன்’ அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: பண மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நடிகை மீரா மீதுனுக்கு போலீஸ் ‘சம்மன்’ அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடைசிய ஆளாக உள்ளே நுழைந்து, பல கலவரங்களை உண்டாகி வருபவர் மீரா மிதுன். மாடல் அழகியான இவர் பல பட்டங்களை வென்றுள்ளார். பணம் மோசடி செய்தாக கூறி பல பேர் இவர் மீது புகார்களும் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் இவர்,சென்னை தியாகராய நகரைச் சேர்ந்த ரஞ்சிதா என்பவரிடம் ரூ 50 ஆயிரம் வாங்கிவிட்டு ஏமாற்றிவிட்டாக கூறப்படுகிறது. இதனால் அதிர்த்தமடைந்த ரஞ்சிதா, அவர் மீது போலீஸில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வரும் 19-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு மீரா மிதுனுக்கு காவல்துறையினர் சம்மன் அளித்துள்ளனர்.
ஆனால் மீராமிதுன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தவுடன் நேரில் ஆஜராகி, இது குறித்து விளக்கம் அளிப்பார் என்று அவர் தரப்பிலிருந்து சொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.