பிக் பாஸ் மீரா மிதுனின் தாயார் காவல் நிலையத்தில் புகார்! 

 

பிக் பாஸ் மீரா மிதுனின் தாயார் காவல் நிலையத்தில் புகார்! 

மீரா மிதுனின் தாயார் ஜோ மைக்கேல் என்பவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

சென்னை: மீரா மிதுனின் தாயார் ஜோ மைக்கேல் என்பவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

பிக்பாஸ் சீசன் 3 ஞாயிறு கிழமை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 16 ஆவது போட்டியாளராக மாடல் மீரா மிதுன் நுழைந்தார். இவரின் வருகை சக போட்டியாளர்களுக்குப் பிடிக்காத காரணத்தினால் தினமும் வீட்டில் ஒரு சண்டை ஏற்படுகிறது. 

மேலும் அவர் சில மோசடியில் ஈடுபட்டதால், அவருக்கு வழங்கியிருந்த மிஸ் சௌத் இந்தியா என்ற பட்டத்தை, திரும்பிப் பெற்றுக் கொண்டனர். அதுமட்டுமின்றி இவர் மிஸ் தமிழ்நாடு திவா என்ற தலைப்பில் அழகி போட்டி நடத்த முயன்று பிரச்சனையில் சிக்கினார். 

அப்போது அவர் மீது கமிஷனர் அலுவலகத்தில் சிலர் புகாரும் கூறியிருந்தனர். இந்நிலையில் இவர் அழகி போட்டி நடத்த முயன்ற சமயத்தில் அதை தடுத்த ஜோ மைக்கேல் என்பவர் தற்போது சில யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்துள்ளார். 

அதில் மீரா மிதுனை மிரட்டும் வகையிலும், அவரை விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற வைப்பேன்.. எனத் தெரிவித்து உள்ளார். இதனைப் பார்த்த, மீரா மிதுனின் தாயார் சியாமளா, ஜோ மைக்கேல் மீது, சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு கொடுத்து உள்ளார்.

அந்த மனு உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம்: 

12

 

345

இதன் முலம் கண்டிப்பாக பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு பெரிய பூகம்பமே இருக்கிறது என்பது மட்டும் நிச்சியம்.