பிக் பாஸ் பைனல்ஸ்க்கு தகுதியில்லாத ஆள் ஐஸ்வர்யா: ஜனனி, ரித்விகா பொளேர்!

 

பிக் பாஸ் பைனல்ஸ்க்கு தகுதியில்லாத ஆள் ஐஸ்வர்யா: ஜனனி, ரித்விகா பொளேர்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டிக்கு தகுதியில்லாத போட்டியாளர் ஐஸ்வர்யா என ஜனனியும், ரித்விகாவும்ம் கமல்ஹாசனிடம் தெரிவித்துள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கி சென்றுக் கொண்டிருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் இன்றைய எவிக்‌ஷனுக்கு பாலாஜி, டேனி, ஜனனி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் 9 பேரில் இருந்து ஒருவர் வீட்டைவிட்டு வெளியேறவுள்ளனர்.

இந்நிலையில், பைனலிஸ்டாக இந்த நபர் வந்துவிடவே கூடாது என நீங்கள் நினைக்கும் போட்டியாளர் பெயரை குறிப்பிடலாம் என கமல்ஹாசன் போட்டியாளர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கிறார். இதற்கு பதிலளித்த ஜனனியும், ரித்விகாவும் துளியும் யோசிக்காமல் மக்களின் கருத்தை வெளிப்படுத்துவது போல் ஐஸ்வர்யா என பகிரங்கமாக கூறினர்.

 

நாமினேஷனுக்கே போகாமல் இரண்டு முறை காப்பாற்றப்பட்டவர் ஐஸ்வர்யா. கடவுள் காப்பாற்றுவதாக கூறுகிறார் ஆனால் தோழியால் அவர் காப்பாற்றப்பட்டார் என ரித்விகா உள்ளதை வெளிப்படையாக கூறினார். இதற்கு கமல்ஹாசன், தப்பும்மா அப்படி எல்லாம் சொல்லக் கூடாது என்கிறார்.

மக்கள் முன்னாடி சர்வைவ் பண்ணிட்டு இங்க உக்கார சொல்லுங்க அவங்க தகுதியானவங்கன்னு நான் ஒத்துக்குறேன் என ரித்விகாவும், ஜனனியும் கோரஸ் பாடுகின்றனர். இதனிடையே, ஐஸ்வர்யா, யாஷிகா மூலமாக கடவுள் என்னை காப்பாற்றுகிறார் என கூறுகிறார்.

இன்றைய நிகழ்ச்சியிலும் ஐஸ்வர்யா தான் டார்கெட் போல தெரிகிறது. நாமினேஷனில் ஐஸ்வர்யா இல்லாததால், அவர் இன்று வெளியேறப்போவதில்லை. மாறாக இந்த வாரம் வெளியேறுவது டேனியா?பாலாஜியா? என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர்.