பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து சரவணன் வெளியேற கமல்ஹாசன் தான் காரணமா? விஜய் பட இயக்குநர் ஓபன் டாக்! 

 

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து சரவணன் வெளியேற கமல்ஹாசன் தான் காரணமா? விஜய் பட இயக்குநர் ஓபன் டாக்! 

பிக் பாஸ் சீசன் 3யில் இருந்து சமீபத்தில் சரவணன் அதிரடியாக வெளியேற்றப்பட்டார். 

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து சரவணன் வெளியேற கமல்ஹாசன் தான் காரணமா? விஜய் பட இயக்குநர் ஓபன் டாக்! 

சென்னை: பிக் பாஸ் சீசன் 3யில் இருந்து சமீபத்தில் சரவணன் அதிரடியாக வெளியேற்றப்பட்டார். 

பிக் பாஸ் சீசன் 3யில் கடந்த திங்கள்கிழமை சரவணன் பாதி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். அதை கேட்ட சக ஹவுஸ் மேட்ஸ் துக்கம் தாங்க முடியாமல் ஓவென்று கதறி அழுதனர். பின்னர் காரணம் கூறுகையில் அவர் கடந்த முறை மீரா- சேரன் மீது வைத்த குற்றச்சாட்டுச் சமயத்தில் தானும் கல்லூரி படிக்கும் காலத்தில் அது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார். 

அவர் நகைச்சுவையாகச் சொல்ல அந்த விஷயம் பெரிய பூகம்பமாக வெடித்தது. இருப்பினும் அந்த விவரகரம் குறித்து அவர் மன்னிப்பு கேட்டும் அவர் அதிரடியாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் அவர் வெளியேறியதற்கு உன்மையான காரணம் அவர் கமல்ஹாசனை ஒருமையில் பேசியது தான் என்று ஒரு செய்து சமூகவலைத்தளங்களில் உலா வந்து கொண்டு இருந்தது. 

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து  இயக்குநர் பேரரசு பேட்டியளித்துள்ளார். அப்போது கமல்ஹாசனை ஒருமையில் பேசியதால் தான் நடிகர் சரவணன் வெளியேற்றப்பட்டாரா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, ‘கமல்ஹாசன் ஒரு லெஜெண்ட். அவரை சரவணன் அப்படிப் பேசினாரா என்பது சந்தேகம் தான். சேரன் பெரிய இயக்குநராக இருந்தாலும், சரவணன் ஹீரோவாக நடித்த படத்தில் அவர் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். அதன் காரணமாக அவர் பேசியிருக்கலாம். ஆனால் கமல்ஹாசன் அப்படி அல்ல. 

மேலும் சரவணன், கமல்ஹாசனைத் தான் அப்படிப் பேசினாரா என்பது எனக்குத் தெரியாது. ஏனெனில் அந்த வீடியோ கொஞ்சம் லாங்கா இருந்தது. அது பிக்பாஸில் வொர்க் பணிபுரிபவர்களுக்கு தெரிந்திருக்கும். அவர் உண்மையாக அப்படிப் பேசியிருக்கும் பட்சத்தில் அதன் காரணமாக வெளியேற்றப்பட்டிருக்கக் கூடும். பேருந்தில் இடிச்சேன் என்பது பெரிய காரணமில்லை. அப்படி இருந்தா உடனே அவரை எலிமினேட் செய்யப்பட்டிருக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.