பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக என்னை படுக்கைக்கு அழைத்தார்கள்: பிரபல தொகுப்பாளினி வெளியிட்ட பகீர் தகவல் 

 

பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக என்னை படுக்கைக்கு அழைத்தார்கள்: பிரபல தொகுப்பாளினி  வெளியிட்ட பகீர் தகவல் 

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகப் பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது. 

ஹைதராபாத்: பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகப் பிரபல டிவி தொகுப்பாளினி கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது. 

பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடா என்று பல மொழிகளில் ஒளிபரப்பாகிறது. தமிழில் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே போன்று தெலுங்கில் வரும் 21ஆம் தேதி முதல் பிக்பாஸ் தெலுங்கு 3 நிகழ்ச்சி தொடங்கவுள்ளது.

இந்த நிகழ்ச்சியை நாகார்ஜூனா தொகுத்து வழங்கவுள்ளார். இந்த நிலையில் பிக்பாஸ் தெலுங்கில் கலந்து கொள்ளப்போகும் போட்டியாளர்கள் சிலரின் பெயர்கள் உலா வரும் நிலை தொடங்கியுள்ளது. ஆனால் ஒருசிலர் அந்த தகவலை மறுத்துள்ளனர். 

swetha

இந்த நிலையில் இதில் கலந்து கொள்ளப் பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான ஸ்வேதா ரெட்டியை பிக்பாஸில்  கலந்து கொள்ள அழைத்துள்ளனர். அவரும் அந்த வாய்ப்பை மறுக்காமல் ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால் சம்மதம் தெரிவித்த பிறகு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர் போன் செய்து பேசியுள்ளார். அது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய ஸ்வேதா ரெட்டி, ‘நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஒருவர் எனக்கு போன் செய்து பேசினார். உங்களை ஒரு போட்டியாளராக தேர்வு செய்தால் எனக்கு என்ன கிடைக்கும் என்று கேட்டார். அவர் எதை மனதில் வைத்துக் கொண்டு பேசுகிறார் என்பது எனக்கு புரிந்துவிட்டது. இதையடுத்து நான் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மறுத்துவிட்டேன்’ என்று கூறியுள்ளார்.