பிக் பாஸ் தர்ஷன் மீது காதலி சனம் ஷெட்டி போலீசில் பரபரப்பு புகார்!

 

பிக் பாஸ் தர்ஷன் மீது காதலி சனம் ஷெட்டி போலீசில் பரபரப்பு புகார்!

தர்ஷன் வெளியேறியதற்குக் காரணம்  ஷெரின் என்று கூறினார். இருப்பினும் இது குறித்து தர்ஷன் இதுவரை வாய்திறக்கவில்லை. 

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர்  தர்ஷன். இறுதிப் போட்டியில்  தர்ஷன் தான் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் வெளியேறியது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்தது. சிலர் அவருக்காகக் கண்ணீர் வடித்தனர்.

ttn

இதனிடையே தர்ஷன் காதலி மாடல் அழகி சனம்  ஷெட்டி குறித்து பரவலாகச் செய்திகள்  வெளியாகின. பிக் பாஸ் வீட்டுக்குள் தர்ஷன் ஷெரின் நெருக்கமானதைக் கண்டு சனம்  ஷெட்டி வெளியிலிருந்து கதறிக்கொண்டிருந்தார்.

ttn

பின்னர் தர்ஷன் வாழ்க்கையில்  இனி நான் இல்லை என்று கூறிய அவர், திடீரென்று  தர்ஷன் வெளியேறியதற்குக் காரணம்  ஷெரின் என்று கூறினார். இருப்பினும் இது குறித்து தர்ஷன் இதுவரை வாய்திறக்கவில்லை. 

tt n

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு சனம் ரெட்டியை சந்தித்த தர்ஷன் காதலை உறுதி செய்யவில்லை என்று தெரிகிறது. இதனால் மனம் நொந்துபோன சனம் அடிக்கடி மறைமுகமாக தர்ஷனை திட்டியவாறு இருந்தார். 

ttn

இந்நிலையில் மாடல் அழகி சனம் தர்ஷன் மீது புகார் அளிக்க சென்னை காவல் ஆணையர் அலுவலகம் வந்துள்ளார். அதாவது நிச்சயதார்த்தம் செய்து விட்டு தர்ஷன் திருமணம் செய்ய மறுப்பதாகப் புகார்  கூறியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.