பிக் பாஸ் ஜூலியை வெச்சி செய்த நெட்டிசன்கள்! 

 

பிக் பாஸ் ஜூலியை வெச்சி செய்த நெட்டிசன்கள்! 

பிக் பாஸ் ஜூலி சுய விளம்பரம் செய்துவருவதாக நெட்டிசன்கள் வெச்சு செய்து வருகின்றனர்

சென்னை: பிக் பாஸ் ஜூலி சுய விளம்பரம் செய்துவருவதாக நெட்டிசன்கள் வெச்சு செய்து வருகின்றனர். 

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பிரபலமான மரியா ஜூலியானா, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சர்ச்சைக்குரிய முழக்கங்களை எழுப்பி விமர்சிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல வாய்ப்புக் கிடைத்த ஜூலி, அதை மிகவும் சாதுர்யமாக பயன்படுத்திக் கொண்டார். 

மக்கள் மனதில் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டாலும், ஜூலிக்கு அவர் விருப்பம் போல் திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன. பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ஜூலி நிகழ்ச்சி தொகுப்பாளராக களமிறங்கினார். அதைத்தொடர்ந்து படங்களின் வாய்ப்பும் அவரை தேடிவந்தது. அவரது நடிப்பில் உருவாகிவரும் ‘அம்மன் தாயி’ படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு ரிலீசாகி வைரலானது. இதையடுத்து மருத்துவ கல்வி கனவால் தற்கொலை செய்துக் கொண்ட மாணவி அனிதாவின் கதையில் அனிதா கேரக்டரில் நடித்துவருகிறார். 

இந்நிலையில், ஜூலி இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என அனைத்திலும் தனது புகைப்படத்தை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.அதற்கு என்ன தான் நெட்டிசன்கள் பலரும் கிண்டல் செய்து வந்தாலும் அதனை கண்டுகொள்ளாமல் புகைப்படம் வெளியிட்டுவந்துள்ளார்.

biggboss julie

இவ்வாறு சமீபத்தில் ஜூலி தனது ஷார்சாட் பக்கத்தில் தானே வடிவமைத்த ஆடை ஒன்றை அணிந்து கொண்டு,அதன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சுய விளம்பரம் செய்து கொண்ட ஜூலி தற்போது இங்கேயும் வந்துட்டாங்களா என்று நெட்டிசன்கள் பலரும் வெச்சு செய்து வருகின்றனர்.அந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.