பிக் பாஸ் சரவணனுடன் ‘ஜாங்கிரி’ மதுமிதா…வைரல் போட்டோஸ்!

 

பிக் பாஸ் சரவணனுடன் ‘ஜாங்கிரி’ மதுமிதா…வைரல் போட்டோஸ்!

வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட சரணவன், மதுமிதா ஆகியோர் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வரவில்லை.

பிக் பாஸ் மதுமிதா மற்றும் சரவணன் இருவரையும் அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது. காரணம்  இந்த சீசனில் அவர்கள் இருவரும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற  போதிலும், சில காரணங்களுக்காக அதிரடியாக வெளியேற்றப்பட்டனர்.  பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட சரணவன், மதுமிதா ஆகியோர் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வரவில்லை.

 

பல இடங்களில் அவர்களின் பெயர்களை கூட யாரும் சொல்லவில்லை.  இதற்கு காரணம், பெண்கள் குறித்து தவறான கருத்தை கூறியதால்  சரவணன் வெளியேற்றப்பட்டார். அதேபோல் மதுமிதா  மனஅழுத்தம் ஏற்பட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால் இவர்கள் இருவரும்  சர்ச்சையில் சிக்கி விலகியதால் இவர்களை மீண்டும் அழைக்கவே  இல்லை. 

ttn

இருப்பினும் இவர்கள் குறித்த செய்திகள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகிக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் மதுமிதா சரவணன் இருவரும்  வீட்டு மனை விற்பனை விழாவுக்கு தலைமை தாங்கி  அதை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்கள்.

ttn

அப்போது இவர்கள்  செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நீண்ட நாட்கள் கழித்து இருவரையும் ஒன்றாக பார்ப்பதாக அவர்களின் ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.