பிக் பாஸ்: இது எல்லாம் ஒரு புரோமோவா… காறித்துப்பும் நெட்டிசன்கள்! 

 

பிக் பாஸ்: இது எல்லாம் ஒரு புரோமோவா… காறித்துப்பும் நெட்டிசன்கள்! 

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து சண்டை, சச்சரவாகச் சென்று கொண்டு இருந்தது. அதற்கு மிக முக்கிய காரணம் வனிதா தான். அவர் செய்யும் செயலை பார்த்து போட்டியாளர்கள் மட்டுமின்றி ரசிகர்களுக்கும் அவரை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கூறினார். 

அவர்களின் ஆசைப் படியே கடந்த வாரம் வனிதா எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது அவர் இல்லாத காரணத்தினால் நிகழ்ச்சி சுவாரஸ்யமாகவே இல்லை என்று ரசிகர்கள் குறை கூறி வருகின்றனர். ஆனால் அவரின் இடத்தை பிடிக்க மீரா தற்போது முயற்சி செய்து வருகிறார். 

இந்த நிலையில் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. அதில் ஆக்டிவிட்டி ரூமில் போட்டியாளர்களிடையே நீயா நானா விவாதம் நடைபெறுகிறது. அதன்படி ‘இந்த வீட்டின் கிளீனிங் டீம் கடமை உணர்வோடு வேலை செய்கின்றனர் vs பாசாங்கு செய்கிறார்கள் என்று மீரா தலைப்பில் இது நடைபெறுகிறது. 

முதல் ஆளாக வேலை செய்கின்றனர் என்ற டீம் சார்பில் தர்ஷன் பேசுகிறார், ‘இங்க இருக்க அனைவருமே சுத்தம், சுகம் தரும் என்று வாழப்பவர்கள், அவங்க எப்படி பாசாங்கு பண்ணுவாங்க? என்று அழுத்தமாகக் கூறியுள்ளார். இதற்கு மறுபுறத்திலிருந்து சரவணன் பேசுகையில், ‘கிளீன் பண்ண சொல்றாங்க, ஆனா இங்க ஒரு பொண்ணு தூங்கிட்டே இருக்கு’ என்று மறைமுகமாக மீராவை கலாய்க்கும் வகையில் கூறுகிறார். அவரின் எந்த பதிலை கேட்ட ஹவுஸ் மேட்ஸ் நகைச்சுவையாகச் சிரிக்க ஆரம்பித்துவிட்டனர். 

1

இந்த புரோமோவை பார்த்த ரசிகர்கள், ‘இது எல்லாம் ஒரு புரோமோவா’ என்று காறித்துப்பி வருகின்றனர்.