பிக் பாஸில் பெண்கள் ஜட்டி போட்டுட்டு சுத்துறாங்க! பிரபல இயக்குநர் 

 

பிக் பாஸில் பெண்கள் ஜட்டி போட்டுட்டு சுத்துறாங்க! பிரபல இயக்குநர் 

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி குறித்து பிரபல இயக்குநர் ஒருவர் பேட்டியளித்துள்ளார். 

சென்னை: பிக் பாஸ் 3 நிகழ்ச்சி குறித்து பிரபல இயக்குநர் ஒருவர் பேட்டியளித்துள்ளார். 

பிக் பாஸ் மூன்றாவது சீசனையும், முதல் இரண்டு சீசன்களை போல் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த ஜூன். 23ம் தேதி 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய து. இதில் ஆண்களை விட பெண்களே அதிகமாக உள்ளனர். அதில் சில பெண்கள் அணியும் உடைகள் பற்றி கடுமையான விமர்சனங்கள் வலுத்து வருகிறது. 

அதனால் அது குறித்து மதுமிதா சில பெண்கள் அரைகுறை ஆடை அணிந்து இருப்பது தமிழ் கலாச்சாரத்திற்குச் சரியல்ல என கூறினார். அதனால் வீட்டிற்குள் ஒரு சண்டையே நடந்தது என்பது அனைவரும் அறிந்ததே… இந்நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து இயக்குநர் கவுதமன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில், ‘எச்சரிக்கையையும் மீறி பிக்பாஸில் ஆபாசம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. குட்டை பாவாடை, ஜட்டி போட்டுகொண்டு பெண்கள் திரியிறாங்க. இப்படியே தொடர்ந்தால் போராட்டம் நடக்கும். வீட்டில் இருக்கும் குப்பையை வெளியில் கொட்டலாம். ஆனால் ஊரில் இருக்கும் அனைத்து குப்பையையும் வீட்டில் கொண்டு வந்து கொட்டுகிறது பிக் பாஸ் நிகழ்ச்சி.

ஒரு குழந்தைகள் ஒழுக்கத்துடன் வளர வேண்டும். இதில் ஒருவர் மூன்று பெண்களைக் காதலிப்பதாகக் கூறுகிறார். அதை பற்றி குழந்தைகள் கூட தற்போது பேசுகிறார்கள். நான் தொகுப்பாளர் மட்டுமே என கமல் சொல்லி தப்பிக்க முடியாது. கோட்டையை ஆளனும் என நினைக்கும் அவர் குழந்தைகள் ஒழுக்கத்துடன் வளரவேண்டும் என்கிற பொறுப்பு அவருக்கும் உள்ளது’ என்று ஆவேசமாகப் பேசியுள்ளார்.