பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள்: சேரன் நிலைமை நினைத்து உருகும் வசந்த பாலன்! 

 

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள்: சேரன் நிலைமை நினைத்து உருகும் வசந்த பாலன்! 

பிக் பாஸ் வீட்டில் இருந்து உடனே வெளியேறுங்கள் என்று சேரனை நோக்கி இயக்குநர் வசந்த பாலன் கூறியுள்ளார். 

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து உடனே வெளியேறுங்கள் என்று சேரனை நோக்கி இயக்குநர் வசந்த பாலன் கூறியுள்ளார். 

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி தொடங்கி 41வது எட்டியுள்ளது. வீட்டிலிருந்து பாத்திமா பாபு, வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா மற்றும் மீராமிதுன் உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டனர். இதில் இயக்குநர் சேரன் ஏன் கலந்து கொண்டார் என்று பலரும் இன்றுவரை விமரிசனம் செய்து வருகின்றனர். 

கடந்த சில நாட்களாகவே இவருக்கும், சரவணனுக்கு சில கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றனர். அது நேற்று ஒரு பூகம்பம் போல் வெடித்தது. இந்த நிலையில், சேரனுக்கு பிரபல இயக்குநர் வசந்த பாலன் கோரிக்கை ஒன்றைத் தனது பேஸ்புக் பக்கத்தின் வாயிலாகக் கூறியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, ‘அன்புள்ள சேரன் சார் அவர்களுக்கு வணக்கம். உங்களுக்கு இது கேட்காது என்று தெரியும். காற்றின் ரகசியப் பக்கங்களில் இந்த செய்தி ஊடேறி உங்களைத்தொடும் என்றே நம்புகிறேன்.
உங்களின் படங்களின் ரசிகனாய் சொல்கிறேன். வித்யா கர்வத்துடன், நீங்கள் இருந்த இடம் மிகக் கம்பீரமானது. பருந்து பறக்கும் வானத்தின் உயரத்தில் சஞ்சரிப்பவர் நீங்கள். பாரதி கண்ணம்மா, பொற்காலம், ஆட்டோகிராப் என அற்புதமான இலக்கியப்படைப்புகள்.

திரையில் இலக்கியம் செய்ய ஆசைப்பட்டு அதில் வென்று காட்டியவர் நீங்கள். காலத்தின் கரையான் உங்களையும் உங்கள் படங்களையும் அழித்துவிடமுடியாது. இயக்குநர் மகேந்திரன், இயக்குநர் பாலுமகேந்திராவுடன் ஒப்பிடக்கூடிய திரை ஆளுமை நீங்கள்.

பிக்பாஸ் அரங்கில் இருப்பவர்களுக்கு உங்களின் உயரம் தெரியாது. நீங்களும் நடிகர் சரவணனும் ஒன்று என்றுதான் நினைப்பார்கள். அறியாமை என்ன செய்ய… உடனே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள்.
இயக்குநர் சங்கப் பதவியில் கௌரவக்குறைவு ஏற்பட்ட போது உடனே அதை விட்டு வெளியேறினீர்கள். ஆகவே, கலைஞன் எந்த நிலையிலும் அவனின் மேன்மையை எந்த கீழ்மைக்கும் உட்படவிடுதல் வேண்டாம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.