பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சாக்ஷி பதிவிட்ட முதல் போஸ்ட் என்ன தெரியுமா? 

 

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சாக்ஷி பதிவிட்ட முதல் போஸ்ட் என்ன தெரியுமா? 

பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சாக்ஷி பதிவிட்ட முதல் போஸ்ட் என்ன தெரியுமா? 

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் மூன்றாவது சீசன் 50 -வது நாளை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இதிலிருந்து பாத்திமா பாபு, வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா மற்றும் சரவணன் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் இருந்து சாக்ஷி அகர்வால் வெளியேறினார். அவர் மற்றவர்களைப் பற்றி புறம் பேசுகிறார், நடிக்கிறார் என்று மக்கள் அவரை வெளியேற்றினர். தற்போது பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். 

அதில் ‘ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்! ஒருவரை இவ்வளவு விரைவாக நம்பி இருக்கக் கூடாது.  அதற்கும் நான் தான் பொறுப்பு. அவர் அன்பையும் உணர்ச்சிகளையும் தெளிவாக வெளிப்படுத்தினார். அவரே தாம் கூறினார், திருமணம் மற்றும் பிற விஷயங்களுக்கான எல்லா குணங்களும் என்னிடம் உள்ளது என்று. அது விளம்பரத்திலேயே இருக்கிறது, ஆனால் அவர் ஒவ்வொரு வாரமும் பார்வையாளர்களின் கைதட்டல்களை அடிப்படையாகக் கொண்டு தனது நட்பை மாற்றிக் கொண்டார். 

இங்கு இருந்து செல்லும் பொது உண்மையான ஜோடியாக வெளியே செல்வோம் என்று கூறினார். ஆனால் எனக்கு முன்னால் லாஸ்லியாவுடன் நெருக்கமாக ஆரம்பித்தார். அவரும் தொடர்ந்து விளையாடுவதை விளையாடினர்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.