பிக்பாஸ் வீட்டுக்குள் போலீஸ் வருவது புதிதல்ல! தஞ்சமடையும் குற்றவாளிகளை குறி வைத்து பிடிக்கும் போலீஸ்!! 

 

பிக்பாஸ் வீட்டுக்குள் போலீஸ் வருவது புதிதல்ல! தஞ்சமடையும் குற்றவாளிகளை குறி வைத்து பிடிக்கும் போலீஸ்!! 

தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் இந்தி ஆகிய பல மொழிகளில் பரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். கோடிக்கணக்கான ரசிகர்களை தன்னுள் தக்க வைத்துள்ள பிக்பாஸ் வீட்டிற்குள்  போலீஸ்வருவது புதிதல்ல… ஏற்கனவே பல முறை இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. 

தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் இந்தி ஆகிய பல மொழிகளில் பரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். கோடிக்கணக்கான ரசிகர்களை தன்னுள் தக்க வைத்துள்ள பிக்பாஸ் வீட்டிற்குள்  போலீஸ்வருவது புதிதல்ல… ஏற்கனவே பல முறை இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. 

அபிஜித் பிசுகாலே எ

தமிழில் நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் போல, மராத்தியிலும் அதேபோன்ற முறையில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இரண்டாவது சீசனில், பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவரான அபிஜித் பிசுகாலே என்பவரை, திடீரென சூட்டிங் நடக்கும் செட்டுக்குள் புகுந்து போலீசார் கைது செய்தனர். சக போட்டியாளர்கள் இது ஏதோ நாடகம் என்று நினைத்துக்கொண்டிருக்க, அபிஜித் போலீசாரால் வெளியே அழைத்துச் செல்லப்பட்டார். அரசியல் தலைவரான அபிஜித் செக் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது. 

கத்தி மகேஷ்

இதேபோன்று கடந்தாண்டு ஸ்டார் மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த தெலுங்கு பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான கத்தி மகேஷ் என்பவரும் பிக்பாஸ் வீடு புகுந்து கைது செய்யப்பட்டார். கத்தி மகேஷ் ஒரு சினிமா விமர்சகர் ஆவர். இவர் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 1 இல் பங்கேற்றிருந்தார். இந்நிலையில் இவர் துணை நடிகையிடம் தவறாக நடந்து கொண்டதற்காகவும், இந்துமத கடவுளான ராமனை பற்றி அவதூறாக எழுதிய வழக்கிலும் சிக்கினார். இதையடுத்து இவர் நள்ளிரவில் பிக் பாஸ் வீட்டிற்குள் வைத்து கைது செய்யப்பட்டார். 

வனிதா

இந்நிலையில் தமிழில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள வனிதா விஜயகுமார் மீது கடத்தல் வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது. வனிதாவை கைது செய்ய பிக்பாஸ் வீட்டுக்குள் போலீஸ் நுழைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  வனிதா விஜயகுமார் அவருடைய மகள் ஜோவிதாவை தந்தையிடமிருந்து கடத்திவந்ததாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அவரை தேடிவந்த தெலங்கானா போலீஸ் பிக்பாஸ் வீட்டில் வனிதா இருந்ததை அறிந்து அவரை கைது செய்ய தமிழக போலீசாரிடம் உதவி கேட்டுள்ளனர். தற்போது அவர்கள் உதவியுடன் தெலுங்கானா போலீசார் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணைக்கு பிறகே வனிதா கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீரா

மேலும் மாடல் அழகியும், நடிகையுமான மீரா மிதுனும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றுவருகிறார். இவர் மீது பல்வேறு மோசடி வழக்குகள் இருப்பதால் விரைவில் இவரும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.