பிக்பாஸ் ’புஷ்பா புருஷன்’புகழ் ரேஷ்மா ஆர்மி தெரிந்துகொள்ளவேண்டிய பர்சனல் சமாச்சாரங்கள்…

 

பிக்பாஸ் ’புஷ்பா புருஷன்’புகழ் ரேஷ்மா ஆர்மி தெரிந்துகொள்ளவேண்டிய பர்சனல் சமாச்சாரங்கள்…

பாத்திமா பாபு, வனிதா விஜயகுமாருக்கெல்லாம் ஆர்மி ஆர்மி ஆரம்பித்தால் பக்கத்துவிட்டு கூர்காவே துப்பாக்கி எடுத்து சுட்டு விடுவார் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியும்.மீரா மிதுன், சாக்‌ஷி அகர்வாலும் கூட ஆர்மி அளவுக்கு ஒர்த் இல்லை என்னும் நிலையில் புஷ்பா புருஷன் புகழ் ரேஷ்மா பசுபுலேட்டிதான்

இந்த முறை ‘பிக் பாஸ் சீஸன்3’ல் யாருக்கு ஆர்மி ஆரம்பிப்பது என்று தெரியாமல் வாலிப வயோதிக அன்பர்கள் கொஞ்சம் குழம்பித்தான் போயுள்ளார்கள். ஷெரின் பெயரைக் கேட்டவுடன் மனதுக்குள் வயலின் வாசித்தவர்கள் அவரது தோற்றத்தைப் பார்த்தவுடன் அப்செட் ஆகிவிட்டார்கள். பாத்திமா பாபு, வனிதா விஜயகுமாருக்கெல்லாம் ஆர்மி ஆர்மி ஆரம்பித்தால் பக்கத்துவிட்டு கூர்காவே துப்பாக்கி எடுத்து சுட்டு விடுவார் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியும்.மீரா மிதுன், சாக்‌ஷி அகர்வாலும் கூட ஆர்மி அளவுக்கு ஒர்த் இல்லை என்னும் நிலையில் புஷ்பா புருஷன் புகழ் ரேஷ்மா பசுபுலேட்டிதான் ஒரே சாய்ஸ் என்பதாகத் தெரிகிறது.

reshma

அவருக்கு ஆர்மி துவங்குவதற்கு முன்பாக தமிழ்கூறும் நல்லுலகம்  தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய சமாச்சாரங்கள் இவை…

1. ரேஷ்மா, 1977ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி சென்னையில் பிறந்தார். இவருக்கு சுஷ்மா, தீப்தி என இரண்டு சகோதரிகள் உள்ளனர். ‘இதயத்தை திருடாதே’, ‘அக்னி நட்சத்திரம்’, ‘அஞ்சலி’ உள்ளிட்ட பலப் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் பிரசாத் பசுபுலெட்டியின் மகள்தான் ரேஷ்மா.2. இவர், நடிகர் பாபி சிம்ஹாவின் சகோதரி (கசின் சிஸ்டர்) என்பது பலருக்கும் தெரிந்திராத தகவல்.

3. ரேஷ்மா, தனது பள்ளிப்படிப்பை அமெரிக்காவில் படித்தார். அத்துடன், அமெரிக்காவில் உள்ள செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தில், கம்பியூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இதையடுத்து, சாஃப்ட்வேர் டெஸ்டிங் படிப்பை சென்னையில் முடித்தார்.

reshma

3. ”அமெரிக்காவில் யாரும் அவ்வளவாக ஒருத்தருக்கொருத்தார் பேசிக்கொள்ளமாட்டார்கள்; தனிமையாய் இருப்பதைப் போல் இருக்கும். அதனால், அமெரிக்காவைவிட இந்தியாதான் எனக்கு பிடிக்கும். யாரிடமாவது பேசிக்கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகவே, அமெரிக்காவில் ஏர் ஹோஸ்டஸ் பணியில் சேர்ந்தேன்” என ரேஷ்மா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.  மேலும், அமெரிக்காவில் வளர்ந்ததால், வெஸ்டர்ன் ஸ்டைலில் மிகவும் கம்ஃபர்டபிளாக இருப்பதாக பலமுறை கூறியுள்ளார்.

4. மாடலிங் மற்றும் சினிமாவில் விருப்பமான இவர், செய்தி வாசிப்பாளராக தனது முதல் பயணத்தைத் தொடங்கினார். இதையடுத்து, தெலுங்கு சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்தார். ‘Brilliant Mind’, ‘Movie Mantra’, ‘Hi5’, ‘Big Screens’ போன்ற நிகழ்ச்சிகளில் ரேஷ்மா முத்திரை பதித்தார். அத்துடன், ‘சன் சிங்கர்’, ‘செலபிரிட்டி கிச்சன்’ ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். 

reshma

5. ‘வம்சம்’, ‘கறை’ உள்ளிட்ட சில தமிழக தொலைக்காட்சித் தொடர்கள் மூலம், தமிழக ரசிகர்களுக்கு அறிமுகமானார் ரேஷ்மா பசுபுலேட்டி. ரேஷ்மாவின் உயரமும் அழகியத் தோற்றமும் வசீகரக் கண்களும் அவரை சினிமாவுக்கு அழைத்து வந்தது. அதன்படி, 2015ம் ஆண்டு வெளியான ‘மசாலாப் படம்’ திரைப்படத்தின் மூலம் வெள்ளித் திரைக்கு முத்தமிட்டார். நடிகர் அஜித்துடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பதே ரேஷ்மாவின் தீராத ஆசை.

6. காபி, டீ, பிரியாணி எல்லாம் நன்றாக சமைப்பாரம். இவரின் வருங்கால கணவனுக்கு பிரியாணி சமைத்துப்போட்டு அவரை குண்டாக மாற்றிவிடுவேன் என்கிறார். அம்மணிக்கு இதுவரை பாய் ஃப்ரண்ட் இல்லையாம்; யாரும் லவ் லெட்டரும் கொடுத்ததில்லையாம். 

reshma

7. தாய்மொழி தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என 6 மொழிகளில் சரளமாக பேசக் கூடியவர். இவர், நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை நதியாவின் தீவிர ரசிகை ஆவார். ரேஷ்மாவின் மிகப் பெரிய ப்ளஸ் என்னவென்றால், அவர் சந்திக்கும் மக்களிடம் இருக்கும் நல்லவைகளை உடனே கற்றுக்கொள்வதுதான்.

8. எழில் இயக்கத்தில், ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தில் இவரின் கதாபாத்திரம் மிகப் பெரிய அளவில் ரசிகர்களிடம் சென்றடைந்தது. இதையடுத்து, தனது சகோதரன் பாபி சிம்ஹா நடித்த ‘கோ 2’ படத்திலும் நடித்துள்ளார். 

reshma

9. ரேஷ்மா, தனது அம்மா மீது கொண்ட பாசத்தின் அடையாளமாக, அவரது வலது கை மணிக்கட்டில் ‘MOM’ என பச்சைக்குத்திக்கொண்டார். மேலும், தீவிரமான சாய்பாபா பக்தர். அத்துடன், ஜோதிடத்தில் அதீத நம்பிக்கையுடையவர்.

10.ஒரு நாளைக்கு சுமார் 2 முதல் 4 மணி நேரம் வரை உடற்பயிற்சியில் ஈடுபடுவாராம்.