பிக்பாஸ் புகழ் சரவணனுக்கு கலைமாமணி விருது வழங்கிய முதலமைச்சர்

 

பிக்பாஸ் புகழ் சரவணனுக்கு கலைமாமணி விருது வழங்கிய முதலமைச்சர்

2018 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் நடைபெறும் விழாவில் வழங்கினார். 

2018 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் நடைபெறும் விழாவில் வழங்கினார். 

இயல், இசை, நாடகம், கலைத் துறையைச் சேர்ந்த கலைஞர்களுக்கு ஒவ்வொரு வருடமும் கலைமாமணி விருது வழங்கப்படுவது வழக்கம். இதற்கான தேர்வுக்குழு மூலம் சாதனையாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்படும். 

கலைவாணர் அரங்கில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.பிக்பாஸ் புகழ் நடிகர் சரவணுக்கு முதல்வர் கலைமாமணி விருதை வழங்கப்பட்டது. அதேபோல் பொன் வண்ணன், இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, பாடலாசிரியர் யுகபாரதி, கானா பாலா, நடியர் பிரபு தேவா,நிகழ்ச்சி தொகுப்பாளரான திருநங்கை சுதா, காமெடி நடிகர் தம்பி ராமையா, எம்.எஸ். பாஸ்கர், நடிகர் சசிக்குமார், நடிகர் சூரி, சிங்கமுத்து,இயக்குநர் ஹரி, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நிர்மலா பெரியசாமி உள்ளிட்ட ஏராளமானோருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.