பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நிறுத்தம்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!?

 

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நிறுத்தம்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!?

தெலுங்கு பிக் பாஸ் 3 நிகழ்ச்கி நிறுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: தெலுங்கு பிக் பாஸ் 3 நிகழ்ச்கி நிறுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ள பிக் பாஸ் சீசன் 3 இம்மாதம் 23 ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ் மட்டுமின்றி பல மொழிகளில் ஒளிபரப்பட்டது வருகிறது. 

அந்த வகையில் தற்போது தெலுங்கில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியானது. இதன் முதல் சீசனை ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கினார். இரண்டாவது சீசனை நடிகர் நானி தொகுத்து வழங்கினார். 

bigg boss

இதில் முதல் சீசன் போல் இரண்டாவது சீசன் இல்லை என்ற ரசிகர்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இந்த நிலையில் மூன்றாவது சீசன் வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதில் ஒரு பகுதியாக போட்டியாளர்கள் அழைக்கும் பணி தொடங்கியுள்ளது.  ஆனால் அவர்கள் அழைக்கப்பட்டவர்களிடம் இருந்து சரியான பதில் வரவில்லை என்று கூறப்படுகிறது. 

இதையொட்டி குறித்த நேரத்தில் நிகழ்ச்சி தொடங்கமுடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில், நிகழ்ச்சி குழுவினர் பிக் பாஸ் சீசன் 3 யை நிறுத்திவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தெலுங்கு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

bigg boss

ஆனால் இந்த செய்தியை முற்றிலும் நிகழ்ச்சி குழு முற்றிலும் மறுத்துள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், ‘போட்டியாளர்கள் தேர்வு தற்போது வரை நடைபெற்று வருகிறது. இன்னும்  ஓரிரு மாதங்களில் நிகழ்ச்சி தொடங்கும்’ என்று கூறியுள்ளனர். 

தெலுங்கு பிக் பாஸ் சீசன் 3-யின் போட்டியாளராக அனுஷ்கா பங்கேற்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது நாகர்ஜுனாவின் பெயர் அடிபட்டுள்ளது.