பிக்பாஸில் பங்கேற்றதற்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை! அரசியலுக்கு வரப்போகிறேன்… – மீரா மிதுன் அதிரடி

 

பிக்பாஸில் பங்கேற்றதற்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை! அரசியலுக்கு வரப்போகிறேன்… – மீரா மிதுன் அதிரடி

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் ஒப்பந்தம் செய்தபடி எந்தவொரு தொகையையும் அந்த நிறுவனம் இன்னும் கொடுக்கவில்லை என மீரா மிதுன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் ஒப்பந்தம் செய்தபடி எந்தவொரு தொகையையும் அந்த நிறுவனம் இன்னும் கொடுக்கவில்லை என மீரா மிதுன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

Meera

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றப்பலருக்கு சினிமாவில் நடிக்க பல வாய்ப்புகள் நாடி வந்த நிலையில் மீராமிதுன் மட்டும் பிரச்னைகள் தான் தொடர்ந்துகொண்டே வந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன் பண மோசடி உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்தா மீரா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னும் தனது வாயால் பலரின் பேரின் வெறுப்பை சம்பாதித்துள்ளார். கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஜூலை 27ம் தேதி மீரா மிதுன் வெளியேற்றப்பட்டார். ஜூலை  அதன்பிறகு, போட்டோ ஷூட், திரைப்பட வாய்ப்புகளில் கவனம் செலுத்தி வந்தார். 

Meera

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மீரா மிதுன், “க்பாஸ் நிகழ்ச்சி முடிந்தும் இன்று வரை ஒப்பந்தம் செய்யப்பட்டபடி எந்த ஒரு தொகையும் கொடுக்கவில்லை. இதுவரை ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. அது சம்மந்தமாக தொலைக்காட்சிக்கு தொடர்பு கொண்டால் சரியான பதில் இல்லை. என்னை பற்றி நிறைய விஷயங்கள் தவறாக வந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்க முடியாத அளவு எனக்கு பிரச்சனைகள் இருக்கின்றன. வேறு மாநிலம் சென்றால் தான் பாதுகாப்பாக இருக்க முடியும் என நினைக்கிறேன். என் மீது 2 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. லஞ்சம் வாங்கி கொண்டு என் மீது போலீஸ் பொய் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். எதிர்காலத்தில் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த அரசியலுக்கு வருவேன். எந்த கட்சியுடன் சேர்ந்து செயல்படுவேன் என்று இப்போது கூற விரும்பவில்லை” என்று கூறினார்.