பிகில் மேடையை சரியாக பயன்படுத்தி கொண்டார் விஜய்: கமல் சூசகம்!

 

பிகில்  மேடையை சரியாக பயன்படுத்தி கொண்டார் விஜய்: கமல் சூசகம்!

நடிகர் விஜய் அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள பிகில்  படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது

சென்னை : பேனர் விஷயத்தில் நடிகர் விஜய் சரியான நேரத்தில் சரியான மேடையைப் பயன்படுத்தியிருப்பதாக மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

vijay

நடிகர் விஜய் அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள பிகில்  படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் பேசிய விஜய்,  சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் யார் மீது கோபப்படவேண்டுமோ, அவர்கள்  மீது கோபப்படாமல் லாரி டிரைவர் மீதும் பேனர் அச்சடித்தவர் மீதும் பழிபோடுகிறார்கள் என்று பரபரப்பு குற்றச்சாட்டினார். விஜய்யின் இந்த மாஸ் பேச்சு சமூகவலைதளங்களில்  வைரலானது. 

kamal

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் பேனர் குறித்து நடிகர் விஜய் பேசியது பற்றி கேள்வி எழுப்பப் பட்டது. அதற்கு பதிலளித்த கமல், ‘சரியான நேரத்தில் நியாயத்திற்காகக் குரல் கொடுத்த விஜய்க்கு வாழ்த்துகள்’ என்றார்.