பிகில் படத்திற்காக ரசிகர்கள் யாரும் பேனர் வைக்கக்கூடாது – விஜய்

 

பிகில் படத்திற்காக ரசிகர்கள் யாரும் பேனர் வைக்கக்கூடாது – விஜய்

பிகில் பட இசை வெளியீட்டு நிகழ்வின் போது ரசிகர்கள் யாரும் பேனர்கள் வைக்கக் கூடாது என ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். 

பிகில் பட இசை வெளியீட்டு நிகழ்வின் போது ரசிகர்கள் யாரும் பேனர்கள் வைக்கக் கூடாது என ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். 

சென்னை பள்ளிகரணை அருகே சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் மேலே விழுந்ததால், இருசக்கரவாகனத்தில் சென்றுகொண்டிருந்த குரோம்பேட்டை, நெமிலிச்சேரியைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் கீழே விழுந்து லாரியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலராக இருந்துவரும் ஜெயகோபாலின் மகள் திருமணத்திற்கு வைக்கப்பட்ட பேனர் தான் சுபஸ்ரீயின் மீது விழுந்து அவரது உயிர் பிரிய காரணமாக அமைந்தது. இதையடுத்து ஜெயகோபால் மீது பள்ளிகரணை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். 

banner

இந்நிலையில் நடிகர் விஜய், “பிகில் பட இசை வெளியீட்டு நிகழ்வின் போது ரசிகர்கள் யாரும் பேனர்கள் வைக்கக் கூடாது” என ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் தத்தம் மாவட்ட மன்ற உறுப்பினர்களுக்கு விஜய்யின் அறிவிப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.