பா.ரஞ்சித் படத்தில் டப்பிங் பேசி முடித்த பிக் பாஸ் ரித்விகா 

 

பா.ரஞ்சித் படத்தில் டப்பிங் பேசி முடித்த பிக் பாஸ் ரித்விகா 

பா.ரஞ்சித் தயாரித்துள்ள இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தில் நடிகை ரித்விகா தனது டப்பிங் பணியை முடித்துள்ளார். 

சென்னை: பா.ரஞ்சித் தயாரித்துள்ள இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தில் நடிகை ரித்விகா தனது டப்பிங் பணியை முடித்துள்ளார். 

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பாளராக அறிமுகமான திரைப்படம் பரியேறும் பெருமாள். சாதிக் கொடுமைகளை மையமாகக் கொண்டு உருவாகிய அப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பு பெற்றது. 

அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தை ரஞ்சித் தயாரித்துள்ளார். அறிமுக இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கியுள்ள இப்படமும் இந்தியாவில் உள்ள சாதி அரசியலைப் பேசும் வகையில் உருவாகியுள்ளது. அட்டகத்தி தினேஷ் ஹீரோவாக நடிக்க, ரித்விகா, அனேகா இணைந்து நடித்துள்ளனர். 

riythu

முனீஷ்காந்த், ரமேஷ் திலக் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாண்டிச்சேரி, விழுப்புரம், சென்னை, பன்ருட்டி போன்ற இடங்களில் நடைபெற்ற இந்த படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் படத்தின் டப்பிங் பணியில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக ரித்விகா தனது காட்சிகளுக்கு டப்பிங் பேசி முடித்துள்ளார். மேலும் விரைவில் படத்தின் மற்ற அப்டேட் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பாக்கப்படுகிறது.