பா. ரஞ்சித் படத்தில் இணைந்த ஆர்யா!

 

பா. ரஞ்சித் படத்தில் இணைந்த ஆர்யா!

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

கபாலி மற்றும் காலா படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ரஞ்சித் பாலிவுட்டில் படம் இயக்குகிறார் . பழங்குடி இனத் தலைவரான பிர்ஸா முண்டா வாழ்க்கையைத் தழுவி இந்தப் படம் உருவாவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதன் ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் தற்போது அந்த படத்திற்கு முன்பாக ரஞ்சித் தமிழில் அடுத்த படத்தை எடுக்க முடிவு செய்துள்ளார். பாக்ஸிங் போட்டியை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்க கார்த்தியை அணுகியுள்ளார். ஆனால், கார்த்தி கைவசம் பல்வேறு படங்கள் வைத்துள்ளதால் அந்த வாய்ப்பை தட்டி கழித்துவிட்டார். தற்போது அவருக்குப் பதில் இதில் ஆர்யாவைப் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

 மேலும் இதில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.