பா.ஜ.க-வில் ஐக்கியமாகிறார் ராஜகோபால் அண்ணாச்சி புகழ் ஜீவஜோதி

 

பா.ஜ.க-வில் ஐக்கியமாகிறார் ராஜகோபால் அண்ணாச்சி புகழ் ஜீவஜோதி

சரவண பவன் ராஜகோபால் அண்ணாச்சியால் கணவனை இழந்தவர் ஜீவஜோதி. இவரது கணவர் பிரின்ஸ் சாந்த குமாரை சரவணபவன் ராஜகோபால் படுகொலை செய்து கொடைக்கானல் மலை பள்ளத்தாக்கில் தூக்கி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கணவர் எங்கே என்று ஜீவஜோதி நடத்திய சட்டப்போராட்டம் ராஜகோபால் அண்ணாச்சிக்கு கடைசி வரைக்கும் நிம்மதியான தூக்கத்தை தரவில்லை

சரவண பவன் ராஜகோபால் அண்ணாச்சியால் கணவனை இழந்தவர் ஜீவஜோதி. இவரது கணவர் பிரின்ஸ் சாந்த குமாரை சரவணபவன் ராஜகோபால் படுகொலை செய்து கொடைக்கானல் மலை பள்ளத்தாக்கில் தூக்கி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கணவர் எங்கே என்று ஜீவஜோதி நடத்திய சட்டப்போராட்டம் ராஜகோபால் அண்ணாச்சிக்கு கடைசி வரைக்கும் நிம்மதியான தூக்கத்தை தரவில்லை. 

jeevajothi

தற்போது ஜீவஜோதி தமிழக பா.ஜ.க-வில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கு விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே ஜீவஜோதி தஞ்சாவூரில் குடியேறினார். அங்கு உணவகம் நடத்தி வந்தார். அதில் நஷ்டம் ஏற்படவே தற்போது தையல் நிலையம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், ஜீவஜோதியை தமிழக பா.ஜ.க நிர்வாகி கருப்பு முருகானந்தாம் சில தினங்களுக்கு முன்பு சந்தித்து பா.ஜ.க-வில் இணையும்படி அழைத்துவிடுத்ததாக கூறப்படுகிறது. ஜீவஜோதிக்கும் அரசியலில் ஆர்வம் உண்டு என்பதால் அடுத்தகட்டமாக வானதி ஶ்ரீனிவாசனுடன் அவர் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து பிரபல இதழ் ஒன்று ஜீவஜோதியிடம் கேட்டது. அதற்கு அவர், “தமிழக பா.ஜ.க-வில் இணைந்தது உண்மைதான். கடந்த மாதமே இணைந்துவிட்டேன். வானதி ஶ்ரீனிவாசன் என்னை மிகவும் உற்சாகப்படுத்தினார். கருப்பு முருகானந்தாம் என்னுடைய கணவர் பிரின்ஸ் சாந்தகுமாருக்கு உறவினர்தான். அவர் முன்னிலையில் வரும் வாரத்தில் முறைப்படி கட்சியில் இணைய உள்ளேன்” என்று கூறியுள்ளார்.

jeevajothi

ஜீவஜோதிக்கு தமிழக பா.ஜ.க-வில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளதாம். சரவணபவன் ராஜகோபாலுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தவர் என்பதால் தமிழகம் முழுவதும் ஜீவஜோதியை தெரியும். அவர் மீது இன்னும் பலருக்கு பரிவு உள்ளது. அதைப் பயன்படுத்திக்கொள்ள பா.ஜ.க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.