பா.ஜ.க பற்றி நடிகை கஸ்தூரிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சந்தேகம்!

 

பா.ஜ.க பற்றி நடிகை கஸ்தூரிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சந்தேகம்!

தமிழக மக்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் சந்தித்த தமிழர்கள் எல்லோரும் நெற்றியில் விபூதி அல்லது குங்குமம் வைத்துள்ளார்கள். கோவில்கள் கூட்டமாகவே உள்ளது. பழநிக்கான சாலைகள் எப்போதும் பாதயாத்ரிகர்களால் நிறைந்துள்ளது.

பா.ஜ.க மக்களைப் பிரிக்கிறதா அல்லது சேர்க்கிறதா என்ற சந்தேகம் நடிகை கஸ்தூரிக்கு ஏற்பட்டுள்ளதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
ஷிஃபாலி வைத்யா என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “தமிழக மக்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் சந்தித்த தமிழர்கள் எல்லோரும் நெற்றியில் விபூதி அல்லது குங்குமம் வைத்துள்ளார்கள். கோவில்கள் கூட்டமாகவே உள்ளது. பழநிக்கான சாலைகள் எப்போதும் பாதயாத்ரிகர்களால் நிறைந்துள்ளது. பெரும்பாலான இந்துக்கள் இந்து தர்மத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். அப்படி இருந்தாலும் எப்படிப் பிரிவினை பேசும் திராவிட அரசியலில் விழுகிறார்கள்” என்று கேட்டிருந்தார்.

இதற்கு தமிழக ஊடகவியலாளர் ஒருவர் “பகுத்தறிவு – பிரித்தாளும் கொள்கை யாருடையது என எம்மக்கள் நன்கறிவர்” என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு நடிகை கஸ்தூரி நீங்கள்தான் சொல்லுங்களேன் பார்ப்போம் என்று பதிலிட அதற்கு அந்த பத்திரிகையாளர், “தேர்தல் முடிவுகள் எது பிரித்தாளுகிறது என்பதை உணர்த்துகின்றன. மக்களின் முடிவே எது பிரிக்கிற சக்தி என்பதை கூறுகிறது” என்றார்.
இதற்குப் பிறகு நடிகை கஸ்தூரி சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.

 

அதில் அவர், “நான் உங்கள் அளவுக்கு புத்திசாலியில்லை. கடந்த தேர்தலில் பா.ஜ.க மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அவர்கள் பிரிக்கிறார்களா அல்லது ஒன்று சேர்க்கிறார்களா? தமிழகத்தில் பல திராவிட கட்சிகள் வாக்கு வங்கிக்காக போட்டிப்போடுகின்றன. இந்த முறை வெற்றி பெறுபவர் அடுத்த முறை தோல்வியடைபவராக உள்ளார். அப்படி என்றால் அவர்களில் யார் பிரிப்பவர்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பத்திரிகையாளர் தெளிவாக பகுத்தறிவு என்று கூறிவிட்டார். தமிழகத்தில் திராவிட கட்சிகள்தான் மாறி மாறி வருகின்றதே தவிர, வேறு கட்சிகள் வருவது இல்லை. இந்த அரசியல் தெளிவு இல்லாததால் கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.