பா.ஜ.க உறுப்பினர் வீட்டில் 400 சவரன் நகை கொள்ளை !

 

பா.ஜ.க உறுப்பினர் வீட்டில்  400 சவரன் நகை கொள்ளை !

பாஜக பொதுக்குழு உறுப்பினரான ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன் மீஞ்சூர் அருகே உள்ள மேட்டுப்பாளையத்தில் வசித்து வருகிறார்

பாஜக பொதுக்குழு உறுப்பினரான ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன் மீஞ்சூர் அருகே உள்ள மேட்டுப்பாளையத்தில் வசித்து வருகிறார். இவரது சகோதரர் மகளுக்குத் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக அவர்கள் வீட்டில் உள்ள அனைவரும் மும்முரமாகத் திருமண வேலைகளைப் பார்த்து வந்துள்ளனர். திருமணத்திற்காக ஜானகிராமனின் மகள் மற்றும் மகள் உள்ளிட்ட அனைவரும் வெளிநாடுகளிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு வந்துள்ளனர். அந்த திருமணத்திற்காக ஜானகிராமன் வங்கி லாக்கரில் இருந்த 400 சவரன் நகைகளைக் கொண்டு வந்து வீட்டில் வைத்திருந்துள்ளனர். 

ttn

நேற்று ஜானகிராமன் சில வேலைகள் காரணமாக சென்னைக்கு சென்றுள்ளார். அவர் இன்று காலை வீடு திரும்பிய போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு, வீட்டிலிருந்த பொருட்களெல்லாம் சிதறிக் கிடந்துள்ளது. அதனை கண்டு அதிர்ச்சி  அடைந்த ஜானகிராமன் நகை இருக்கிறதா என்று சோதித்து பார்த்துள்ளார். அப்போது, வீட்டில் வைக்கப்பட்டிருந்த 400 சவரன் நகையும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை எண்ணிப் பதறிப் போன ஜானகிராமன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

ttn

இதன் பின்னர் அங்கே சென்ற போலீசார் தடையங்கள் ஏதேனும் கிடைக்கிறதா என்று சோதித்து தடையங்களைச் சேகரித்துள்ளனர். அதனையடுத்து, குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படை அமைத்த போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.