பாளையங்கோட்டை மத்திய சிறையில் சோதனை

 

பாளையங்கோட்டை மத்திய சிறையில் சோதனை

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்

நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை அருகே உள்ள புழல் சிறையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கு, பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய கைதிகள் உள்ளிட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாக புகைப்படங்கள் சமீபத்தில் அம்பலமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்த புகாரின் பேரில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி அங்கிருந்த தொலைக்காட்சி பெட்டிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த சிறை காவலர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். செல்போன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளனவா என்பது குறித்த சோதனையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.