“பால் வண்டியில் மணல் கடத்தல்”.. காவலர் கண்டுபிடித்து விட்டதால் தற்கொலை முயற்சி!

 

“பால் வண்டியில் மணல் கடத்தல்”.. காவலர் கண்டுபிடித்து விட்டதால் தற்கொலை முயற்சி!

ராஜதுரை பால் கேன்களை திறந்து காட்டாமல் வேகமாக வண்டியை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிப்பட்டினம் அருகே நெம்மேலி கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை. இவர் மணல் கடத்தும் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜதுரை ஸ்ரீ பெரும்புதூரில் இருந்து மணல் அள்ளிக் கொண்டு பால் வண்டியில் கடத்திச் சென்றுள்ளார். துரையரசபுரம் அருகே இவர் சென்று கொண்டிருந்த போது, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் வாகனத்தை  நிறுத்தி பால் கேன்களை திறந்து காட்ட சொல்லியுள்ளனர். ஆனால், ராஜதுரை பால் கேன்களை திறந்து காட்டாமல் வேகமாக வண்டியை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். 

ttn

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த வாகனத்தின் பின்னாலேயே சென்றுள்ளனர். அந்த வண்டி மணல் இறக்க வேண்டிய வீட்டுக்கு முன் நின்றதும் மணல் கடத்தப்பட்டுள்ளதை கண்டுபிடித்த போலீசார் அங்கு சென்று ராஜதுரையிடம் விசாரித்துள்ளனர். போலீஸ் மணல் கடத்தியதை கண்டுபிடித்த ராஜதுரை, காவலரை தாக்கி விட்டு அங்கிருந்த கண்ணாடி பாட்டிலை எடுத்து குத்தி கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து அவரை மீட்ட போலீசார், அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், மணல் கடத்திய குற்றத்துக்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.