பால் ஊற்றும் நபருடன் கள்ளக்காதல்…போதையில் இருந்த கணவனை கொலை செய்ய முயன்ற மனைவி!

 

பால் ஊற்றும் நபருடன் கள்ளக்காதல்…போதையில் இருந்த கணவனை கொலை செய்ய முயன்ற மனைவி!

குமார் தினமும் குடித்து வீட்டுக்கு வரும்  நிலையில் கணவன் மனைவி இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

கோவை மணியகாரன் பாளையத்தைச் சேர்ந்தவர் வெல்டர் குமார். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும்,  3 குழந்தைகளும் உள்ளனர்.  சங்கீதா உடையம்பாளையத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்துள்ளார். குமார் தினமும் குடித்து வீட்டுக்கு வரும்  நிலையில் கணவன் மனைவி இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

ttn

இந்நிலையில் சங்கீதாவுக்கும்  வீட்டுக்கு பால் ஊற்றவரும் பிரபு என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் சேர்ந்து வெளியில் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். ஒருகட்டத்தில் சங்கீத கணவர் குமாருடன் வாழ மாட்டேன் என்று கூறி அம்மா வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்றுள்ளார். அப்போது கனவர் குமார் அவரை தன்னுடன் வந்து வாழுமாறு கூறி வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் குமாரை கொலை செய்துவிட்டு பிரபுவை திருமணம் செய்துகொள்ளலாம் என்று சங்கீதாவும், பிரபுவும் திட்டமிட்டுள்ளனர். 

ttn

அதன்படி நேற்று அதிகாலை சங்கீதாவும், பிரபுவும் இணைந்து மணியகாரன் பாளையத்தில் உள்ள குமார் வீட்டிற்கு சென்றனர். போதையில் தொங்கிக்கொண்டிருந்த குமாரை இருவரும் கத்தியால்  குத்தி கொலைசெய்ய முயற்சி செய்தபோது அவர் கூச்சலிட்டு கத்தியுள்ளார். இதனால் அக்கம்பக்கத்தினர் அங்கு வரவே இருவரும் தப்பித்து அங்கிருந்து ஓடியுள்ளனர்.

ttn

இதை தொடர்ந்து குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு  கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நேற்றிரவு சங்கீதா, பிரபு இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.