பால் அபிஷேகம்,பிளெக்ஸ் வேறலெவல்ல செய்றீங்க; நடிகர் சிம்பு ஆவேசம்! 

 

பால் அபிஷேகம்,பிளெக்ஸ் வேறலெவல்ல செய்றீங்க; நடிகர் சிம்பு ஆவேசம்! 

நடிகர் சிம்பு தனக்கு கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்ய வேண்டும் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்

சென்னை: நடிகர் சிம்பு தனக்கு கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்ய வேண்டும் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

நடிகர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான செக்க சிவந்த வானம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து படுபிஸியாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி வெளிவர உள்ளது. 

நடிகர் சிம்பு பொங்கல் நாளன்று தன் ரசிகர்களுக்கு வீடியோ மூலம் வேண்டுகோள் ஒன்று விடுத்திருந்தார் அதில்,”பிளாக்கில் டிக்கெட் வாங்கி படம் பார்க்க வேண்டாம் என்றும் தனது கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யவேண்டாம். அதற்கு பதிலாக ரசிகர்கள் தங்களுடைய அம்மா அப்பாவிற்கு ஆடையையோ அல்லது தேவையான பொருட்களையோ வாங்கி கொடுங்கள். அதைப் புகைப்படம் எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிடுங்கள்.அதைவிட சந்தோசம் எனக்கு வேறு கிடையாது. நான் நல்ல படங்களில் நடிப்பதன் மூலம் உங்கள் பெயரை காப்பாற்றுவேன். நீங்களும் எனக்காக இதைச் செய்யுங்கள்” என்று கூறியிருந்தார். 

இந்நிலையில், இன்று சிம்பு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் மற்றொரு வீடியோ வெளியிட்டுள்ளார் அதில் “நான் சமீபத்தில் எனக்கு கட் அவுட் பாலபிஷேகம் எல்லாம் வேண்டாம் என்று ரசிகர்களிடம் கூறினேன். அதற்கு சிலர் எனக்கெல்லாம் அந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்களா? இவர் எதுக்கு இதெல்லாம் பேசுறாரு. அவருக்கு இருக்குற 2,3 ரசிகருக்கு இது தேவையா? என்று பலர் பேசியுள்ளனர். 

ஒரு தப்பு பண்ணுனா திருத்திக்கனும். அதனால, அந்த 2,3 ரசிகர்களுக்கு நான் சொல்லும் அன்புக்கட்டளை என்னனா? இதுவரைக்கும் நீங்க வைக்காத அளவுக்கு பிளெக்ஸ், கட் அவுட் வைக்கிறீங்க. பால் எல்லாம் பாக்கெட்டில் பத்தாது, அண்டாவில் கொண்டு வந்து ஊற்ற வேண்டும். வேற லெவலில் செய்றீங்க. இதுதான் நான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.” என்று அந்த வீடியோவில் சிம்பு கூறியுள்ளார்.