பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வீட்டுக்கருகே பயங்கர தீ விபத்து -ஒரு பெண் பலி ..

 

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வீட்டுக்கருகே பயங்கர தீ விபத்து -ஒரு பெண் பலி ..

மும்பையின் மையப்பகுதியில்  பாந்த்ரா பேண்ட்ஸ்டாண்டில்,கடல் பகுதியின் வசந்த குடியிருப்பின் ஆறாவது மாடியில், ஷாருக்கானின்  ‘மன்னாட்’ பங்களாவுக்கு எதிரே, காலை 7.30 மணியளவில் இந்த தீவிபத்து நடந்தது.

மும்பையில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் பங்களாவுக்கு எதிரே உள்ள ஒரு குடியிருப்பின் மேல் மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 வயது பெண் இறந்தார் மற்றும் மற்றொரு பெண் பலத்த காயமடைந்தார்.
 
மும்பையின் மையப்பகுதியில்  பாந்த்ரா பேண்ட்ஸ்டாண்டில்,கடல் பகுதியின் வசந்த குடியிருப்பின் ஆறாவது மாடியில், ஷாருக்கானின்  ‘மன்னாட்’ பங்களாவுக்கு எதிரே, காலை 7.30 மணியளவில் இந்த தீவிபத்து நடந்தது.

fire-in-building

 தீயணைப்பு வீரர்கள் தீயை எதிர்த்துப் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சிக்கிய  20 வயது எவானா மோரேஸி என்ற  பெண்ணை பலத்த தீக்காயங்களுடன் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் இறந்தார். 38 வயதான சிஃப்ரா ஜாஃப்ரி என்ற பெண்ணும் 90 சதவீதத்திற்கும் அதிகமான தீக்காயங்களுடன் பாபா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது. இந்த தீ விபத்துக்கான காரணம், இதுவரை அறியப்படவில்லை. இப்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதென அதிகாரிகள் கூறினார்கள்.