பாலிவுட்டில் நுழைந்த மீரா மிதுன்! பிகினியில் மகிழ்ச்சிப்பொங்க வெளியிட்ட வீடியோ!!

 

பாலிவுட்டில் நுழைந்த மீரா மிதுன்! பிகினியில் மகிழ்ச்சிப்பொங்க வெளியிட்ட வீடியோ!!

தமிழில் தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மீராமிதுன். பிக்பாஸ் வீட்டுக்குள்ளே சேரன் மீது தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து குறும்படம் மூலம் அசிங்கப்பட்ட வெளியேறிய மீரா மிதுன், வெளியே வந்த பிறகும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். பண மோசடி புகார் உள்ளிட்ட வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன.

Meera Mithun

இந்நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை… லஞ்சம் வாங்குவது அதிகரித்துவிட்டது, காவல்துறையினர் உண்மைக்கு புறம்பாக நடந்துகொள்கின்றனர், சினிமாவில் ஆணாதிக்கம் அதிகரித்துவிட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றப்பலருக்கு சினிமாவில் நடிக்க பல வாய்ப்புகள் நாடி வந்த நிலையில் மீராமிதுன் மட்டும் தமிழில் வாய்ப்பு கிடைக்காததால் பாலிவுட்டுக்கு சென்றுவிட்டதாகவும் தகவல் கசிகின்றன. அவ்வப்போது கவர்ச்சிப் போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு முகம் சுழிக்க வைத்துவரும் மீரா ட்விட்டரில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், மீரா மிதுன் தனது இன்ஸ்டாகிராமில் பிகினியில் பேசி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், “நீங்கள் எதற்காகவோ கடினமாக உழைக்கிறீர்கள் என்றால் அதை அடையும்போது பெரிதாக உணர்வீர்கள். பாலிவுட்டின் காதலுக்காக” என்று  பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், “நான் டவுன் டவுன் மிரர் ஷூட்டிங்குக்காக இப்படி தோற்றமளிக்கிறேன். நீண்ட காலத்துக்குப் பிறகு, நான் என்னை இது போல ஒரு டர்டில் லுக்கில் பார்க்கிறேன். இது ரொம்ப நல்ல அனுபவமாக உள்ளது. இதில் போட்டோகிராஃபர் ராகுல், ஆடை வடிவமைப்பாளர் ஆர்த்தி. இந்த வாய்ப்புக்கு நன்றி டவுன் டவுன் மிரர், இந்த கவரேஜ்ஜின் வெற்றிப்பெரும் என நம்புகிறேன். லவ் யூ ஆல்” என தெரிவித்துல்ளார்.