பாலியல் வழக்கில் பா.ஜா.க சாமியார் கைது!

 

பாலியல் வழக்கில் பா.ஜா.க சாமியார் கைது!

பா.ஜ.க முன்னாள் அமைச்சர் சுவாமி சின்மயானந்த் கீழ் இயங்கி வரும் ஷாஜகான்பூர்  சட்டக் கல்லூரியில் பயின்று வரும் மாணவியை, அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பாதிக்கப் பட்ட மாணவி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதனையடுத்து,  அப்பெண்ணின் தந்தை  ஷாஜகான்பூரில் உள்ள காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தார். 

Swami sinmayananth

புகார் அளித்ததும் பாதிக்கப் பட்ட பெண் காணாமல் போனதால் சுவாமி சின்மயானந்த்ன் மீது கடத்தல் வழக்கு பதிவாகியது. மேலும், முமுக்க்ஷூ ஆசிரமத்தின் கீழ் இயங்கி வரும் கல்லூரி ஒன்றில் பாதிக்கப் பட்ட பெண்ணின் தாயார்  பேராசிரியராக நியமிக்கப் பட்டார். அவரது, ஆவணங்களை சமர்ப்பிக்கக் கூறி சிறப்பு விசாரணைக் குழு உத்தரவிட்டதால், கல்லூரி முதல்வர் அந்த ஆவணங்களை சமர்ப்பித்தார். அதனை, வரும் 23 ஆம் தேதி அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் சமர்பிக்கப் பட உள்ளது. 

Swami sinmayanath

மேலும், சின்மயானந்த் மீது எழுந்த பாலியல் புகாரை இன்று விசாரித்த சிறப்பு விசாரணைக் குழு, அவர் செய்த குற்றம் நிரூபிக்கப் பட்டு அவரை கைது செய்ததாக தகவல்கள் வெளியாகின்றன.