பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த மாணவி குடும்பத்திற்கு 5 லட்சம் நிதியுதவி!

 

பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த மாணவி குடும்பத்திற்கு 5 லட்சம் நிதியுதவி!

அரூர் மலை கிராமத்தில் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

தருமபுரி: அரூர் மலை கிராமத்தில் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் அரூர் மலை கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஒருவர், கடந்த 5-ஆம் தேதியன்று இரண்டு காமுகர்களால் பாலியல் வன்கொடுமை செய்து சித்ரவதை செய்யப்பட்டுள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட அந்த மாணவி, தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தமிழகம் முழுவதும் இந்த விவகாரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், சிறுமியை வன்கொடுமை செய்த இருவரில் ஒருவர் போலீசாரிடம் பிடிபட்டார். மற்றொருவர் அவராக நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   

இந்நிலையில், உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ. 5 லட்சம் நிதியை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.