பாலியல் புகாருக்கு உள்ளான ஆசிரியரை விடுவிக்க கோரி மாணவர்கள் போராட்டம்

 

பாலியல் புகாருக்கு உள்ளான ஆசிரியரை விடுவிக்க கோரி மாணவர்கள் போராட்டம்

அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டிருக்கும் ஆசிரியர் கண்ணனை விடுதலை செய்ய வேண்டும் என பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை: அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டிருக்கும் ஆசிரியர் கண்ணனை விடுதலை செய்ய வேண்டும் என பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள கண்ணக்குருக்கை மேல்நாச்சிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் காலாண்டு தேர்வு முடிந்து மாணவர்களுக்கு விடுமுறை அளித்திருந்த நிலையில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்காகச் சிறப்பு வகுப்பு விடுமுறையில் நடைபெற்றுள்ளது. அப்போது கணிதம் பாடத்திற்கான சிறப்பு வகுப்பு முடிந்த உடன்  ஒரு மாணவியை ஆசிரியர் கண்ணன் தனியாக அழைத்து வந்து தலைமையாசிரியர் அறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து ஆசிரியரின் நடத்தை குறித்து மாணவி தனது பெற்றோரிடம் மாணவி கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவியின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பள்ளிக்குள் புகுந்து மாணவ, மாணவிகளுக்கு முன் வைத்து மண்டை உடையும் அளவு கடுமையாக தாக்கினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஆசிரியர் கண்ணனை கைது செய்து அழைத்து சென்றனர்.

இந்நிலையில், பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டிருக்கும் ஆசிரியர் கண்ணனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அரசு உயர்நிலை பள்ளி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.